விசித்திர காட்சிகள்

தொடக்கத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் கலைஞர்,

காமராஜருக்கும் கலைஞருக்குமான பெரும் போர் உலகறிந்தது

விருதுநகரில் காமராஜரை கலைஞர் கோஷ்டி தோற்கடித்தபொழுதுதான் கனிமொழி பிறந்தார்

நாகர்கோவில் வரை அவரை விரட்டியடித்தார் கலைஞர்

நாகர்கோவிலில் “இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?” என முழங்கியவர் கலைஞர்

நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின் அந்த தோல்வியில் காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி

அப்பொழுது கனிமொழிக்கு வயது 5

அந்த கனிமொழி இப்பொழுது நாடார்கள் பலமான தூத்துகுடியில் தானும் நாடார் வாரிசு என வந்து நிற்கின்றார்

காலம் எப்படி எல்லாம் விசித்திரமாக காட்சிகளை காட்டுகின்றது..