இதென்ன பிரமாதம்

“இதென்ன பிரமாதம்,

எங்க அண்ணன் விட்டான் பாரு ஒரு ராக்கெட், அதுல விண்புலிகள் 10 பேர் போனாங்க அண்ணன் தான் ஓட்டுனாரு, நேரே போய் சிங்களனுக்குள்ள செயற்கை கோளை அணைச்சி போட்டானுக‌ நம்ம புலிகள்.

நானும் அண்ணனும் அதை கவனிச்சிட்டே இருந்தோம்

அது ராத்திரி 12 மணிங்கிறதுனால உலகம் தூங்கிட்டு எவனுக்கும் தெரியல, அந்த‌ நேரத்துல இலங்கையில‌ தொலை தொடர்பு இல்ல, அந்த இடைவெளியிலதான் புலிகள் ஆயுதம் வாங்குறது, சிங்களன அடிக்கிறது எல்லாம்

பொட்டண்ணா கூட அப்போ கொழும்புல டீ குடிக்க போயிருக்காரு ஆனா பிடிக்க முடியல‌

விண்வெளியில எப்படி நேரம் பாக்குறது? அதான் அண்ணன் சேவல் கோழி ஒண்ணு கொண்டு வந்திருந்தாரு, 4 மணிக்கு அது கூவவும் சட்டுண்ணு சுவிட்ச் எல்லாம் போட்டுட்டு வான் புலிகள் செட்டுகுள்ள வந்தாச்சி

அண்ணன் சர்ருன்னு வன்னி காட்டுக்குள்ள இறங்கிட்டாரு

சிங்களன் முழிச்சி பார்த்தா ஒண்ணுமில்ல, எல்லாம் அள்ளிட்டு போயாச்சி, செயற்கை கோள நம்பி இருந்தவன் மலங்க மலங்க முழிச்சான்

எப்டின்னே இதெல்லாம்னு கேட்டேன்

அண்ணன் சொன்னார், “இனத்துக்கு ஒண்ணுண்ணா எங்க போய் எதையும் அணைச்சி போட தயாரா இருக்கணும்டா, அது வானமா இருந்தாலும் சரின்னு சொன்னார்”

எனக்கு இந்த வண்டிய தாங்கண்ணு கேட்டேன், நாடு அடைஞ்ச பின்னாடி நாம இதுலதான்டா ஒவ்வொரு நாட்டுக்கும் போவேன், இந்த சில்ற பயலுகமாதிரி சாதாரண விமானத்துல போகமாட்டேன்னாரு..”

ஹஹஹ்ஹஹ ஹஹஹஹஹ ஹாஹ ஹாஹஹ்