ஆம் இதுவும் “நெஞ்சுக்கு நீதி”
அடுத்த தேர்தலில் யார் வருவார் என தெரியாது, அது அவசியமுமில்லை
ஆனால் இந்த ஆட்சி ரஷ்யவிடமிருந்து வாங்கிய எஸ் 400 சிஸ்டமும், அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் எப் 21 ரக விமானமும் தேச பாதுகாப்பினை வலுபடுத்தும்
அசாட் ரக ஏவுகனைகள் செயற்கைகோளுக்கு பாதுகாப்பு வழங்கும்
இன்னும் நவீன எமிசாட் போன்றவை சிறந்த உளவுதகவலை தரும்
இந்த அரசில் வெளிவராத விஷயம் இந்தியாவின் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனை விவகாரம்
ஓசைபடாமல் அதை வெற்றிகரமாக செய்தது இந்தியா, ஆனால் இன்னும் சில மேம்பாடு வேண்டும் என்பதற்காக அமைதி காக்கின்றது
பன்னெடுங்காலமாக ரஷ்ய பிடியில் சிக்கி வெள்ளையானைக்கு இடும் தீனிபோல் சென்றுகொண்டிருந்த செலவுகளை கட்டுபடுத்தி நாட்டிற்கு எது தேவையோ அதை சரியாக செய்திருக்கின்றது இந்த அரசு
அதை எம்மால் உறுதியாக சொல்லமுடியும்
செயற்கைகோள் முதல் கப்பல்படை வரை மிகபெரும் வலிமையினை செய்துவிட்டுத்தான் விடைபெறுகின்றார்கள்
ஆம் மன்மோகன் அரசு செய்யதயங்கியது அல்லது செய்யதவறியதை எல்லாம் துணிந்து செய்துவிட்டுத்தான் கரையேறுகின்றார்கள்
தமிழன் கலாம் பெயரில் K -Series என வருங்கால ஏவுகனைகளைபெயரிட்டு அழைக்கின்றது இந்த அரசு, மிகபெரும் விஷயம் அது
பலநாட்டு ராணுவ தளவாட நடபடிகளை கவனிக்கின்றோம் என்ற முறையில் எம்மால் இதை உறுதியாக் கூறமுடியும்
நெஞ்சுக்கு எது நீதியோ அதை நாம் சொல்லிகொண்டே இருப்போம்
ஆம் இதுவும் “நெஞ்சுக்கு நீதி”