இஸ்ரேலில் தேர்தல்
மேற்காசியாவின் தனிபெரும் செல்வாக்கு நாடான இஸ்ரேலில் தேர்தல் நடந்துவிட்டது விரைவில் முடிவு அறிவிக்கபடும்
விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் நாடு அது, இஸ்ரேலில் நுழையும் காற்றை கூட கண்காணிக்கும் நாடு அது
ஆனால் வாக்கு எந்திரம் கிடையாது வாக்கு சீட்டு மட்டுமே, அதுதான் ஆதார பூர்வமான ஜனநாயகமாம்
அங்கு பதவிக்கு வரவேண்டும் என்றால் தமிழகம் போல நடிகர் நடிகை வசனகர்த்தா எல்லாமோ அவர்களின் அடிப்பொடியோ வாரிசுகளோ வரமுடியாது
அங்கு தேர்தலில் நிற்பவர்கள் நாட்டுக்காக போர், ராணுவம்,உளவுதுறை என சிலவற்றில் சாதித்திருக்க வேண்டும்
இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல சூரத்தனமான நடவடிக்கைகளை களத்தில் செய்தவர், உகாண்டாவுக்கு இஸ்ரேல் விமானம் கடத்தி செல்லபட்டு மீட்கபட்டபொழுது இவர் அண்ணன் உயிரழந்தார்
அதன்பின்பும் அதே போல ஒரு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு காலில் தோட்டா வாங்கினார் இந்த நேதன்யாகு
மிகபெரும் சாதுர்யமான அவரின் அதிரடி அக்காலத்தில் பிரசித்திபெற்றது, தீவிரவாதிகளிடமிருந்து ரத்தம் சிந்த சிந்த இஸ்ரேலியர்களை அவர் மீட்டார்
அப்படிபட்ட மாவீரர்கள்தான் அங்கு நிற்க முடியும்
எதிர்த்து நிற்கும் இந்த கான்ட்ஸ் என்பவர் கூட முன்னாள் இஸ்ரேலிய தளபதி, 2009ல் லெபனானை போட்டு சாத்தியவரும் , சிரியாவின் அணுவுலைகளை தகர்த்தவரும் அவர்தான்
இருவருக்கும் பலத்த போட்டி என்றாலும் நேதன்யாகு மோடி போல் நம்பிக்கையாய் இருக்கின்றார்
பாஜகவுக்கு ராமர் கோவில் போல அவர்களுக்கு யூத கோவில், அந்த அரசியலும் அங்கு உண்டு
மேற்காசியாவின் மிக வல்லமையான நாடான இஸ்ரேலின், அப்பகுதியின் சமாதானத்தை நிர்ணயிக்கும் மகா பலம் பொருந்திய இஸ்ரேலை ஆளபோவது யார் என்பது மிக விரைவில் தெரியும்
நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தன்னை நிரூபித்தால்தான் அவர்கள் அங்கு போட்டிக்கே வரமுடியும், பின்ன ஏன் இஸ்ரேல் உலகையே மிரட்டாது?
ஹிம்ம்
அந்த நாட்டை பார்த்துவிட்டு தமிழக நிலையினை நினைத்து கொள்ளுங்கள் , ஒரு விரக்தி நிறைந்த சிரிப்பு வருமல்லவா? வரும் நிச்சயம் வரும்
அதுதான் நம் அருமை தமிழகத்தின் சோகமான தலைவிதி
இந்த சோக தலைவிதியினை சிரிக்க சிரிக்க எழுதியது யாரென்றால் சாட்சாத் திமுகவும் அதன் அரசியலும்
அதில் சந்தேகமே இல்லை