ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைது

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிகொண்டிருந்த ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைதுசெய்யபட்டுவிட்டார்

அன்னார் உலகெல்லாம் சர்வர்களில் புகுந்து தகவல் திரட்டி அசாஞ்சே லீக்ஸ் என ரகசியங்களை வெளியில் கொட்டிகொண்டிருந்தார்

(ஆனால் அவராலும் கொடநாட்டிலும் கோபாலபுரத்திலும் ஊடுருவ முடியவில்லை, தமிழகம் என்றால் சும்மாவா)

அதில் நிறைய அமெரிக்காவுக்கு எதிரானது என்பதால் அந்நாடு வலைவீசி தேடியது , ஈக்வெடார் நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அதை வைத்து லண்டனில் சுற்றிகொண்டிருந்தார்

இந்நிலையில் ஈக்வெடார் அரசு கையினை விரித்துவிட அசாஞ்சே கைதாகிவிட்டார்

அமெரிக்க அரசுக்கான ரகசியங்களை வெளியில் விட்டால் அதற்கு சமமான நாட்டிடம் சென்று சேர வேண்டும்

அதில் எட்வர்ட் ஸ்னோடன் கெட்டிக்காரர், அமெரிக்கா தேடுகின்றது என்றவுடன் ஹாங்காங் வழியாக ரஷ்யாவுக்கு தப்பினார், இப்பொழுது புட்டீனின் பாதுகாப்பில் அமைதியாக இருக்கின்றார்

இப்பொழுதும் ரஷ்ய உளவுதுறை டிரம்புக்கு தலைவலி கொடுத்தபடிதான் இருகின்றது

அசாஞ்ச்சே இதில் சிக்கிகொண்டார், ஸ்னோடன் அவர் போக்கில் ஹாயாக இருக்கின்றார்