பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது
இந்தியாவில் தேர்தல் தொடங்கிவிட்ட நேரம் பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது
அதாவது அந்த பாலகோட் பக்கம் இந்திய விமானத்தால் தாக்கபட்ட மதராசாக்களுக்கு பத்திரிகையாளரை அழைத்து சென்று காட்டிவிட்டது
அது மதராசாவில் சில இடிபாடுகளும் இருந்திருக்கின்றன, அது பழமை காரணமாக இடிந்ததே தவிர விமான குண்டு வீச்சு இல்லை என சொல்லிவிட்டது பாகிஸ்தான்
பத்திரிகையாளரும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள்
அதாவது பாகிஸ்தானில் இந்தியா குண்டு வீசவில்லை என நிரூபிக்க படாதபாடு படுகின்றது
ஆனால் பலத்த கேள்விகள் எழுகின்றன
இதை தாக்குதல் நடந்த பிப்ரவரியிலே நடந்தபின்னும் இப்பொழுதுதான் பத்திரிகையாளரை அழைத்து சென்றது ஏன்?
உள்ளூர் மக்களிடம் ஏதும் பேசவே கூடாது எனும் கடும் நிபந்தனையுடன் அவர்களை அழைத்து சென்றது ஏன்?

பத்திரிகையாளருடன் தடவியல் நிபுணர்கள் யாரும் வராதது ஏன்?
மகா முக்கியமாக இந்தியா நடத்தாத தாக்குதலுக்கு ஏன் எப்16 சகிதம் பாகிஸ்தான் கிளம்பியது?
ஆக உலகம் என்ன முடிவுக்கு வருகின்றதென்றால், இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை, அந்த தடயங்களை மிக கச்சிதமாக இந்த இருமாத காலத்தில் மறைத்த பாகிஸ்தான் அதன்பின் பத்திரிகையாளரை அழைத்து சென்றிருகின்றது
“என்ன நாடு அது? தடயத்தை அழிக்க இரு மாதமா ஆகும்? அவ்வளவு அடி பலமோ?” என பாகிஸ்தானை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றது விஷயம் தெரிந்த உலகம்
