27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன்
பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன்
சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன்
முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர்
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஆங்கில ரீஜர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையாக தமிழில் முத்தாரம் பத்திரிகையினை நடத்தினார்,
உண்மையில் அது தகவல் களஞ்சியம். உலகம் அப்படி கொட்டி கிடக்கும்
அந்த பத்திரிகையின் இன்னொரு வடிவமாகத்தான், விஞ்ஞான வடிவமாகத்தான் பூமாலை எனும் வீடியோ கேசட் கடை மாறன் குடும்பத்தாரால் தொடங்கபட்டது
1990வரை தமிழக டிவி என்றால் பொதிகையும், இந்தியில் வரும் மண்டல ஒளிபரப்பும், இலங்கை டிவி நிலையமுமே
இக்காலத்தில் உலகெல்லாம் தனியார் டிவிக்கள் வர அதாவது பத்திரிகை உலகம் டிவி மீடியாக்களுக்கு மாறிய புதிதில் கொஞ்சமும் சுணக்கமின்றி கலைஞர் குடும்பமும் பாய்ந்தது
அதில் அன்று அமெரிக்காவில் படித்துவிட்டு வந்த கலாநிதி மாறனின் செயல்பாடும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது
தமிழக டிவி வரலாற்றினை சன்டிவிதான் தொடங்கி வைத்தது, முதலில் அரைமணி நேரம் பின் ஒருமணி நேரம் என கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது வளர்ந்தது
கலைஞர் மிக பெரும் சினிமா எழுத்தாளர் ரசனையாளர் மட்டுமல்ல, நுண்ணிய பத்திரிகையாளர் என்பதால் அவரின் பல நுட்பங்களும் பத்திரிகை நடத்திய அனுபவமிருந்த முரசொலிமாறனின் பங்களிப்பும் சன்டிவியினை வேகமாக வளர்த்தன
அரசியல், சினிமா, பத்திரிகை பேட்டி, உலகம் என எல்லா விஷயங்களுக்குள் அன்றாடம் புழங்கிய குடும்பம் என்பதால் பத்திரிகைக்குள்ள நேர்த்தியுடனே அதனை வளர்த்தனர்
அரசியல் பேட்டி, நேர்காணல், சினிமா, இன்னபிற நிகழ்ச்சிகள் என வளர்ந்தது சன்டிவி, முக்கியமாக செய்திக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமே தனி
கலைஞரின் முரசொலிமாறனின் பத்திரிகை அனுபவமே அதற்கு கைகொடுத்தது, குறிப்பாக வார்த்தைகள்
தொடங்கிய 3 வருடங்களுக்குள்ளே அது வளர்ந்தது, ஜெயா கைது நடவடிக்கை அவரின் சொத்துக்களை அது காட்டிய விஷயங்கள் அன்று பரபரப்பானவை
ராஜிவ் கொலையால் வெறும் 1 எம்.எல்.ஏ என்றிருந்த திமுக நிலையினை 1996ல் திமுக ஆட்சியினை பிடிக்கும் அளவிற்கு அது மாற்றிகாட்டியது
பின்னாளில் அது எத்தனையோ சேனல்களை தொடங்கியது, இன்று மாபெரும் நிறுவணமாக வளர்ந்து நிற்கின்றது
இன்று 27ம் ஆண்டுவிழாவாம் வாழ்த்துக்கள்
ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். சன்டிவியின் வளர்ச்சி என்பது கலைஞர் முதல்வர் என்பதாலோ மாறன் குடும்பம் அமைச்சர் பதவியில் இருந்தது என்பதாலோ அல்ல
மாறாக தங்களின் நீண்ட நெடிய அனுபவத்துடன் விஞ்ஞானத்தை கலந்தார்கள். மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்து நிகழ்ச்சிகளை படைத்தார்கள். மக்கள் அபிமானம் அவர்களுக்கு இருந்தது
தொழில்நுட்பத்தில் கூட சன்டிவி தெளிவாக தெரியுமாறு கவனமாக இருந்தார்கள்
பணமும் அதிகாரமும் வெற்றியினை நிர்ணயிக்கும் என்றால் ஜெயாடிவி எங்கோ சென்றிருக்க வேண்டும், அதுவோ அதாள பாதாளத்தில் கிடக்கின்றது
அன்று இந்தியாவின் மூன்றாம் பணக்காரனாக இருந்தவர் விஜய் மல்லையா , ஆனால் அவரின் விஜய் டிவியினை நடத்த முடியாமல் ஸ்டார் குரூப்பிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்
இப்படி தோற்ற டிவிகள் ஏராளம், உப்புமா கிண்டும் டிவிகள் இன்னும் ஏராளம்
ஆனால் சன்குழுமம் மாபெரும் ஆலமாக வளர்ந்திருக்கின்றது என்றால் காரணம் கலைஞர், முரசொலிமாறன் என்ற ஜாம்பவான்களால் அடிதளமிடபட்ட நிறுவணம் அது.
மக்களிடம் எளிதில் செல்லுமாறு அதன் அமைப்பு உருவாக்கபட்டது
இன்று எத்தனையோ தமிழ் டிவிக்கள் வந்தாயிற்று, இன்னும் வரும்
ஆனால் அவற்றிற்கெல்லாம் முன்னோடி சன்டிவியே சந்தேகமில்லை. எந்நாளும் அதன் இடம் முதலிடம்
இப்போதைய சூழலில் அதற்கு சவால் கொடுக்கும் ஒரு டிவி கூட இல்லை என்பதே நிதர்சனம்
உண்மையில் கலாநிதிமாறன் மிகநுட்பமான வியாபாரி. டிவி பத்திரிகைக்கு அடுத்து எப்.எம் ரேடியோவிற்கும் புத்துயிர் கொடுத்தது அவரே
உலகின் மாறுதலுக்கேற்ப மீடியா உலகில் தமிழகத்தையும் இழுத்து கொண்டு செல்கின்றார்
சன்டிவி சந்தித்த சவாலும் கொஞ்சமல்ல. அதனை முடக்க தொடுக்கபட்ட வழக்குகள் ஏராளம். எல்லாவற்றையும் தாண்டி அது மீண்டு வந்தாயிற்று
சன்டிவிக்கு வாழ்த்து சொல்லும் நேரம், சில கசப்பான உண்மைகளும் கண்முன் வந்து போகின்றன
உண்மையில் சன்டிவியின் அடிக்கல் கலைஞர், மறுக்கவே முடியாது. அவரோ முடிந்தவரை திமுக சார்பு செய்திகளை வெளியிடும் நிறுவனமாக அதனை நடத்த செய்தார், முரசொலிமாறன் இருக்கும்வரை சிக்கல் இல்லை
ஆனால் மாறனுக்குபின் இளைய மாறன்களுக்கு டெல்லி சூனியம் வைக்க, நடக்க கூடாதது எல்லாம் நடந்தது
கலாநிதிமாறன் திமுக சார்பு எனும் நிலையினை மாற்றி பொதுவான டிவியாக மாற்ற முயன்றதில் வெடித்தது சிக்கல், கலைஞரால் அதனை ஏற்க முடியவில்லை
எந்த வயதிலும் என்னால் எந்த பத்திரிகையும் நடத்தமுடியும், எந்த டிவியும் நடத்தமுடியும் என கலைஞர் டிவியினை தொடங்கினார்
ஆனால் சன்டிவியினை வளரவிட்டது போல் அதனை விட கூடாது என அஞ்சிய சிலரின் யோசனையிலே ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னபிற சிக்கல்கள் எல்லாம் வந்தன
இச்சிக்கல்கள் வராமல் இருந்திருந்தால், கலைஞர் 2000களிலே கலைஞர் டிவி தொடங்கியிருந்தால் இன்றைய சன்டியின் முதலிடம் சாத்தியமில்லை
தூக்கி விழுங்கியிருப்பார் கலைஞர்
ஆனால் பெரும் அனுபவமும் இன்னும் பல விஷயங்களையும் உணர்ந்த கலைஞர், தன் முதுமையான காலத்தில் சில விஷயங்களில் அமைதிகாத்தார்
விளைவு சன்டிவி அப்படியே நின்றுகொண்டது, மாறன் சகோதரர்களிடமும் மாற்றம் தெரிந்தது. அடக்கி வாசித்தனர்
டெல்லி சூனியம் புரிந்திருக்கலாம்
இந்த சர்ச்சைகளை தாண்டி சன்டிவிக்கு வாழ்த்து சொல்லியே தீரவேண்டும்
கலைஞர் குடும்பம் என்பதால் சன்டிவி வளரவில்லை, அது தொடங்கி 4 அண்டுகளில் வளர்ந்திருக்கலாம் ஆனால் அதற்கு பின்னால் கலைஞர் 1936களிலே உழைக்க ஆரம்பித்த 60 வருட உழைப்பு இருந்தது, முரசொலிமாறனின் 50 ஆண்டுகால அனுபவம் இருந்தது
இவைதான் சன்டியினை உயர செய்தன. மற்ற டிவிக்கள் எல்லாம் மண்ணை கவ்விய பொழுது சன்டிவி உயர நிற்க இதுதான் காரணம்
இவர்களுக்கு அடுத்துத்தான் கலாநிதிமாறன் எனும் அசாத்திய வியாபாரி வருகின்றார். நிச்சயம் அவரின் பிசினஸ் மூளை அபாரமானது
“முரசொலிமாறனுக்கு என்ன உண்டு? அவன் கல்லூரி காலங்களில் நான் தான் 100ரூபாய் கொடுப்பேன்.” என பல இடங்களில் சொன்னவர் ராமசந்திரன்
கலைஞரோ, முரசொலிமாறனோ அதனை மறுக்கவில்லை. அதில் உண்மையும் இருந்தது
அந்த மாறன் குடும்பம் தன் உழைப்பாலும், பத்திரிகை அனுபவத்தாலும் டிவி தொழிலில் மாபெரும் வெற்றியினை அடைந்திருக்கின்றது
இந்த 27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணியான கலைஞர் சன்டிவியினையும் உயர ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்
கலைஞர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது அவரின் மிகபெரிய பூர்வ ஜென்ம புண்ணியம் அது
சன்டிவி 27 என கொண்டாடும் நாளில் அந்த மூலவரையும் பார்த்து நன்றி சொல்லவேண்டும்.
இன்று அது அவர்கள் டிவி ஆனால் திமுக எனும் இயக்கத்திற்கு அது சொல்ல வேண்டிய நன்றிகள், காட்டவேண்டிய நன்றிகள் எக்காலமும் உண்டு
அது 27 ஆண்டு அல்ல 27 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற கூடாதாது
