ஜூலியன் அசாஞ்ச்சே
இந்த ஜூலியன் அசாஞ்ச்சே எப்படி கைது செய்யபட்டார் என்பதுதான் சுவாரஸ்யம்
அமெரிக்காவுடன் உரசலில் இருந்த அன்னாருக்கு ஈக்வெடார் நாடு அடைக்கலம் வழங்கி லண்டனில் இருந்த ஈக்வெடார் தூதரகத்தில் அடைக்கலம் வழங்கி இருந்தது
இது சுயநல உலகம், ஒருவரால் பயனில்லை என்றால் யாரும் யாரையும் தேடமாட்டார்கள்
அப்படி ஈக்வெடார் அதிபருக்கும் ஏதோ அசாஞ்சேயிடம் தேவைபட்டிருக்கின்றது, அரசியல்வாதி என்றால் அப்படித்தான்
இதனால் அசாஞ்ச்சே அடிக்கடி ஈக்வெடார் ஜனாதிபதியிடம் பேசியிருகின்றார்
இந்த ஈக்வெடார் அதிபர் தமிழிசை போல வெள்ளைமனம் படைத்தவர் போல, அமெரிக்க அரசையே அலறவிட்டவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்ற நினைவில்லாமல் மனிதர் நிறைய பேசியிருக்கின்றார்
என்னதான் கூண்டில் அடைபட்டாலும் புலி குணம் மாறுமா? அசாஞ்சேயும் இவரின் ரகசியங்களை பதிவு செய்வதும் அதை எதிர்கட்சிக்கு அனுப்பி தொடர்பில் இருப்பதுமாக விளையாடியிருக்கின்றார்
கடந்தவாரம் அசாஞ்சேயுடன் வீடியோ கால் செய்து பேசியிருக்கின்றார் ஈக்வெடார் அதிபர் அதில் நண்டுகறி சகிதம் சாப்பிட்டுகொண்டே பேசியிருக்கின்றார்
அதை படமெடுத்த அசாஞ்சே எதிர்கட்சிக்கு அனுப்பிவிட்டார்
எதிர்கட்சியும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க போகின்றோமே என எண்ணாமல் “இதோ குடல் கருகுது கும்பி எரியுது இவருக்கு நண்டுகறி ஒரு கேடா?” என பொதுவெளியில் விஷயத்தை பரப்பிவிட்டார்
போதாதா?
“நாய குளிப்பாட்டி..” என பொங்கிய ஈக்வெடா அதிபர் அசாஞ்சேயினை பிடித்து லண்டனிடம் கொடுத்துவிட்டார்
(இது பற்றி இரு வேறு செய்திகள் உள்ளன, இது உண்மையில் அஞ்சாஞ்சே விளையாட்டு என்கின்றது ஒரு செய்தி
இல்லை, அவர்கள் தொடர்பினை கண்காணித்த அமெரிக்க உளவுதுறை அந்த படத்தை எதிர்கட்சிக்கு அனுப்பி அசாஞ்சேவுக்கும் ஈக்வெடார் அதிபருக்கும் பிணக்கை உண்டாக்கிவிட்டது என்கின்றது இன்னொரு செய்தி)
உளவுதுறை விளையாட்டு வெளிவராது அல்லவா? அசாஞ்சேவாலும் சொல்லமுடியாது
ஆக நண்டுகறியால் சிக்கினார் அசகசாய சூரன் அசாஞ்ச்சே
இந்த அசான்சே மட்டும் தமிழகத்தில் இருந்து தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தால் எப்படி இருந்திருக்கும்..
ம்ம் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்