வாக்காளர்களுக்கு கூடுதல் வசதியாயிற்று

ஆயிரம் ரூபாயினை ஒழித்து 2 ஆயிரம் ரூபாயினை கொண்டு வந்தவர் மோடி என்பது வாக்காளர்களுக்கு கூடுதல் வசதியாயிற்று

இதுவரை திட்டி கொண்டிருந்தவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மோடி செய்திருக்கும் மாபெரும் நல்ல விஷயம் புரிகின்றது

கொடுத்தால் பெரிய நோட்டை கொடு என மிரட்டி வாங்கிகொண்டிருக்கின்றது பொதுஜனம்

அப்பொழுதும் மோடியினை திட்டிகொண்டே இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டுகின்றது அந்த கோஷ்டி

அவர்கள் நகர்ந்தபின் “மோடிக்கு வாக்களித்தால் 5 ஆயிரம் ரூபாய் நோட்டு வரும், உங்களுக்குத்தான் நல்லது, அடுத்த தேர்தலை எண்ணி பாருங்கள்” என செலவே இல்லாமல் விளம்பரம் தேடுகின்றது பாஜக.

பணம் கொடுத்தவனுக்கு வோட்டா?

இல்லை ஆயிரத்தை இப்பொழுது இரண்டாயிரமாக மாற்றி அடுத்தமுறை 5 ஆயிரமாக நோட்டை மாற்றி பெரும் வழி செய்பவனுக்கு வோட்டா என தலையினை பிய்த்து கொள்கின்றது வாக்கள குடி

என்ன இருந்தாலும் நன்றியுள்ள தமிழ் மனம் அல்லவா? அது திகைத்து நிற்கின்றது.

“எப்படி வச்சார் பாத்தியால ஆப்பு, மோடில , ராஜ தந்திரில.. ..” என சொல்லி சிலிர்த்துகொள்கின்றது தென்னக பாஜக தரப்பு