ராஜாஜி எதற்கு பயந்தாரோ அது நடந்தே விட்டது

“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களும் நமக்கு தேவை.

இல்லை என்றால் கொஞ்சநாளில் இந்த சுதந்திர போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும், தியாகிகள் செல்லாகாசாகிவிடுவர்

அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும், எங்கும் பிரிவினைவாதமும், லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்காத‌ அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.

அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டுசொல்லும் காலம் வரும்,

அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது

காலம் காலமாக மன்னராட்சியிலும் பின் பிரிட்டனிடனும் அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது, இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்

கஷ்டபட்டு நாம் அமைக்கும் மக்களாட்சியினை இவர்கள் மிக சுலபமாக மன்னராட்சிக்கு திருப்பிவிடும் ஆபத்து உண்டு…”

1946ல் ராஜாஜி இப்படி சொல்லியிருக்கின்றார்

எவ்வளவு அழகான தீர்க்கதரிசனம், மேன்மக்கள் என்றும் மேன்மக்களே

துரதிருஷ்டவசமாக ராஜாஜி எதற்கு பயந்தாரோ அது நடந்தே விட்டது.