பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது
தமிழக தேர்தல் களம் பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது
முன்பெல்லாம் வாக்கு செலுத்த இவ்வளவு ஆர்வமும் கூட்டமும் வராது, கட்சிகாரர்கள் உழைப்பை பொறுத்தே கூட்டம் வரும்
இப்பொழுது அப்படி அல்ல மக்கள் விழித்துவிட்டார்கள்
எங்கெல்லாம் இருந்தோ தேர்தலுக்கு அலறி அடித்து வருகின்றார்கள்
3 நாள் விடுமுறை அல்ல விஷயம், வெறுப்பு வேறு எங்கோ இருக்கின்றது
ஜல்லிகட்டுக்கு பொங்கிய தமிழகம் போல ஏதோ பெரும் வன்மத்தில் களமிறங்குகின்றார்கள்
அலை அலையாக மக்கள் படையெடுப்பதை பார்த்தால் மிகபெரும் மவுனபுரட்சிக்கு தமிழகம் தயாராவது தெரிகின்றது