தும்பிகளின் பகல் கனவு
ராஜபக்சே ஈழநாடு கொடுத்தாலும் கொடுக்கலாம் இந்த சைமன் தும்பிகளின் பகல் கனவு ஒரு நாளும் நடக்காது
முழு விவசாய நாடு என எதுவும் எங்கும் சாத்தியமில்லை
முதலில் அதை பரிசோதித்து கையினை சுட்டது சோவியத் யூனியன், முழு விவசாயம் நாட்டுக்கு உதவாது என்றபின்பே தொழில்துறைக்கு திரும்பினார்கள்
அடுத்து திருந்தியவன் சீனத்து மாவோ, கலாசார புரட்சி என நகர்புறத்தில் இருந்தவர்களை கிராமத்துக்கு விரட்டி அடித்து விவசாயம் பார்க்க வைத்தான்
ஆனால் நாடு நாசமாயிற்று, அதன் பின் விவசாயம் முழு பொருளாதாரதிற்கு உதவாது என உணர்ந்த மாவோ அமெரிக்க பக்கம் சாய்ந்தான்
அதன் பின் நடந்ததே சீன எழுச்சி
வியட்நாமிலும் தாய்லாந்திலும் விளையாத அரிசி இல்லை காய்கறி இல்லை ஆயினும் நாடுகள் முன்னேறவில்லை
தாய்லாந்து விவசாயத்துக்கு சொர்க்க பூமி, நடுதெருவிலும் நெல்விளையும் அற்புத பூமி ஆனால் என்னாயிற்று?
இன்னும் போதை பொருள் முதல் ஏகபட்ட விஷயங்களில் பணத்தை தேடுகின்றார்கள்
பர்மாவும் வங்கதேசமும் அரிசிக்கு புகழ்பெற்ற நாடுகள் அதுவும் பர்மா உலகிற்கே சோறுபோடும் தன்மையுள்ள நாடு
ஆனால் என்னாயிற்று?
இந்த தும்பிகள் நார்வே பால் உற்பத்தி பார், ஹாலந்தின் உருளை கிழங்கைபார் என கத்துமே தவிர நார்வே ஹாலந்து எல்லாம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் என்பதையோ அங்கு உற்பத்தியாகும் நவீன கருவிகள் பற்றி எல்லாம் பேசாது
அல்லது தெரியாது
உலகை உற்று கவனியுங்கள், தொழில்துறையில் பெரும் பணம் கொட்டும் நாடுகள் அதனை கொண்டுதான் விவசாயத்தை காப்பாற்றுகின்றன
மாறாக விவசாய பணத்தை கொண்டு தொழில்துறையினை வளர்க்கவில்லை அது சாத்தியமுமில்லை
முழு விவசாயம் தக்காளி மட்பாண்டம் கருப்பட்டியில் வல்லரசு எல்லாம் இந்த இம்சைகள் கனவு காணும் விஷயம்
கொஞ்சமும் பொருளாதார அறிவோ பொறுப்பான பேச்சோ எதுவுமே இல்லை
அட தமிழக விவசாயிகளை காக்க எதற்கு அந்நியநாட்டு தீவிரவாதிபடம் என யாரும் இவர்களை கேட்க போவதுமில்லை
இந்த இம்சைகளை விட கமலஹாசன் எவ்வளவோ பரவாயில்லை
மய்யம் இந்த கொசுகூட்டத்துக்கு மருந்து அடித்தால் அவரை வரவேற்கலாம்