சம உரிமை இருக்கின்றது
இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு சந்தேகமில்லை ஆனால் எல்லா மத மக்களும் வாழவேண்டிய நாடு
எல்லா மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமை இருக்கின்றது
மதரீதியான பாகுபாடுகள் இங்கு சிக்கலையே உருவாக்கும், சீக்கிய சமூகத்திற்கு அன்றைய காங்கிரஸ் செய்த சில வலியான சம்பவங்கள் தீரா சோகத்தோடு முடிந்தன
காஷ்மீரிலும் அதைத்தான் செய்கின்றோம், இஸ்லாமியர் இந்நாட்டில் பாதுகாப்பாக அமைதியாக எல்லோரையும் போல் வாழலாம் எனும் நம்பிக்கையினை உண்டாக்க வேண்டுமே அன்றி ஆயுதபலத்தால் அவர்களை அடக்கிவிட முடியாது
அதுவும் பாபர் மசூதியினை இடித்துபோட்ட கட்சியின் ஆட்சியில் அவர்கள் எங்களம் நம்பிக்கையோடு வாழ்வர்?
எல்லா மதமும் இனமும் வாழும் இந்த அற்புதமான நாட்டில் மதமும் ஜாதியும் அரசியலுக்கு பயன்படுவது ஆபத்து
இந்த உலகினை உற்று பார்த்தால் மத பீடத்தின் ஆட்சி நடக்கும் எந்த நாடும் உருபட்டதாக சரித்திரமே இல்லை
பெருவாரியான மக்கள் பின்பற்றும் மதம் என்பதற்காக அது சார்ந்து ஆட்சி நடத்தும் நாடுகள் நாசமாயிருக்கின்றன எண்ணெய்வள நாடுகளை தவிர
பெரும் வளம் இல்லா தேசத்தில் அமைதியும் சகிப்புதன்மையும் மத துவேஷமில்லா ஒற்றுமையான உழைப்பே பெரும் முன்னேற்றம் கொண்டுவரும்.
உலக நாட்டு நடப்புகள் சொல்வது அதுதான், ஒரு தேசம் மதவாதிகள் கையில் சிக்கினால் அது முன்னேறுவது மாபெரும் கடினம்
காரணம் எல்லா மதமும் காலத்தால் முற்பட்டவை, அந்த கருத்துக்களை இன்றைய காலத்திற்கு ஒட்டமுடியாது, மீறி அழுத்தினால் கற்காலத்திற்கு திரும்பிவிடுவோம்
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை இப்படித்தான் சிந்தித்து மதத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன
இந்து மதத்தின் ஒப்பற்ற ஞானி சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான்
“இந்நாட்டிற்கு தேவை மதம் அல்ல , அது இங்க நிறையவே இருக்கின்றது. அதன் தத்துவங்களும் வழிபாடும் போதுமான அளவு இருக்கின்றன.
இந்நாட்டிற்கு தேவை கல்வியும் அறிவும் சகிப்புதன்மையும் சிந்தனையும் கொண்ட இளம் தலைமுறை, அறிவார்ந்த இளைஞர்களை திரட்டி நாட்டை செழிக்க செய்யும் நல்ல எழுச்சி
அறியாமை அகலவேண்டும், இந்தியர் தன்னை உணர வேண்டும், மாபெரும் ஒற்றுமையில் இத்தேசம் செழிக்க வேண்டும்
மதம் இன்றைய தேவை அல்ல, மாறாக அறியாமை நீங்கிய அறிவுடை சமூகமும், சிந்திக்க தெரிந்த தலைமுறையும் நமது அவசிய தேவை
அதை உருவாக்குவதே நம் கடமையும், தேச சேவையுமாகும்”
அந்த இந்துமதத்தின் ஞான ஒளி சொன்ன வார்த்தைகள் உங்கள் காதோரம் ஒலிக்க வாக்கு சாவடிக்கு செல்லுங்கள்