நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..
இந்த மோனாலிசா ஓவியம் புகழ்பெற்றது, ஒருமுறை அது திருடுபோயிற்று
ஆனானும் அந்த ஓவியம் இருந்த இடத்தை பார்க்க கூட்டம் அப்படி அலைமோதிற்று, ஆம் அந்த அற்புத ஓவியம் இருந்த இடத்தை ஓடி ஓடி வந்து பார்த்தார்கள்
பெரும் அடையாளம் நின்ற இடத்தை கூட மறக்கா உலகமிது
அப்படியாக தலைவி களத்தில் இல்லை என்றாலும் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை
அது போக இலவச மின்சாரம் பெற்றுகொண்டிருக்கும் விவசாயியாக எந்நாளும் திமுகவுக்கு நன்றிகடன் உண்டு
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்து உடன்பிறப்புக்கும் சரிபங்கு சொத்துகொடுக்க வைத்ததை தவிர அவர்கள் மேல் ஒரு கோபமுமில்லை
அதனால் என்ன?
அந்த நன்றிக்காக சகோதரி வோட்டும், பெண் பிள்ளைமேல் அதீத பாசம் கொண்ட தாயின் வோட்டும் அவர்களுக்கே..
அவர்கள் என்ன?
வாக்களர்கள் பெண்களோ, மாணவர்களோ , விவசாயியோ, அரசு பணியாளரோ, பத்திரிகையோ, சினிமாவோ எத்துறையில் இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் அவர்கள் விரல் தானாக திமுகவுக்கே வாக்களிக்கும்
ஆம் நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..