இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது
கொஞ்ச நாளாக இல்லா குண்டுவெடிப்பு இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது
பன்னாட்டு உளவு நிறுவணங்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தன , அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பலபடுத்தபட்டபின் கிழக்காசிய மற்றும் ஐரோப்பியர் கூடும் ஆப்ரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள்
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்றது போல நடக்கலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள்
இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முதல் சர்வதேச தீவிரவாதிகள் உலவுவது ஒன்றும் ரகசியம் அல்ல, உலகின் ஆபத்தான குண்டர்கள் இலங்கையின் சிங்கள பாதாள உலக ரவுடிகள் என்கின்றது ஆய்வு
எவ்வளவு என்றால் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு மிகுந்த காரை கூட அவர்கள் வாங்க போட்டி போட்டனர், பின்பு அதை கடலில் போட்டது அரசு
அவ்வளவு பொல்லா கூட்டம் அது, சிங்கம் 2 படத்தில் கூட இயக்குநர் ஹரி அந்த சாயலை காட்டி இருப்பார்
ஆக ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் உள்ளூர் கும்பலோடு கைகோர்த்து இந்த பாதகத்தை நடத்திவிட்டது
உறுதியாக சொல்லலாம் புலிகள் மேல் எவ்வளவு சர்ச்சை இருந்தாலும் கிறிஸ்தவ ஆலயங்கள் பக்கம் வந்ததே இல்லை வந்தால் ஐரோப்பா பக்கம் செல்ல முடியாது
இது முழுக்க முழுக்க ஐரோப்பா பக்கம் செல்லமுடியாத ஏதோ ஒரு தீவிரவாத இயக்கம் செய்திருக்கும் சதி செயல்
எமக்கு வருத்தம் என்னவென்றால் புனித அந்தோணியார் ஆலயத்தில் இந்த சதிசெயலை செய்திருக்கின்றார்கள்
நிச்சயம் புனித அந்தோணியார் அந்த சதிகாரர்களை அடையாளம் காட்டுவார்
பிரான்ஸ் ஆலயத்தை தொடர்ந்து உயிர்ப்பு நாளில் இலங்கை ஆலயமும் சிதைந்து கிடப்பது கிறிஸ்தவர்களுக்கு வலியே
ஆனால் எப்படிபட்டது கிறிஸ்தவம்? இதை போல ஆயிரம் சம்பவங்களை கண்டது மீண்டது
இந்த சர்வதேச சதிசெயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்
ஆனால் நான் அதிகாரத்தில் இல்லாத நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது என ராஜபக்சே வரிந்து கட்டி கிளம்புகின்றார்
அவர் இதை பிடித்து சர் சர்ரென அரசியலில் ஏறி வருவார், பொறுத்து பாருங்கள்
நிச்சயம் கிறிஸ்தவரை ஐரோப்பியரை குறிவைத்து நடந்த தாக்குதல் இது, அவர்கள்தான் குறி
இது கோவை சம்பவம் போல தொடர் குண்டுவெடிப்பு என்பதால் இப்போதைக்கு 80 பேர் காயம் எனும் செய்திதான் வந்திருக்கின்றது
தகவல் வர வர தொடர்ந்து தருகின்றோம்
தயவு செய்து இந்திய மீடியாக்களை மட்டும் பார்த்து தொலைக்காதீர்கள்
