இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு

இயேசுவுக்கும் அவரின் தத்துவார்த்த போதனைக்கும் யூதனுக்கும் என்ன தொடர்பு என்பதை விட நாம் கவனித்தது இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு

அவருக்கும் மீனுக்குமான உறவு மிக மிக வலுவானது

அவர் பழகியது மீணவ சமூகத்திடமே, அவரின் சீடர்களும் மீணவர்களே

அவர் போதனையிலும் அவசர தேவையிலும் மீனையே குறிபிட்டிருக்கின்றார்

சீடரோடு இயேசு மீன் பிடித்திருகின்றார், சுவைத்திருக்கின்றார் அவர்கள் மீன் இன்றி சிரமபடும் பொழுது தன் வல்லமையால் நிறைய பிடிக்க செய்திருக்கின்றார்

தான் மட்டுமல்ல தன்னை நம்பி வந்த கூட்டத்துக்கே பல இடங்களில் இருக்கும் மீனை பெருக செய்து பசி தீர்த்திருக்கின்றார்

ஏன் ஆடு கோழி மாடு என அவர் இறங்கவில்லை? மீனில் மட்டும் இறங்கினார்

அதுதான் மீனின் சுவை

சிலுவையில் மரித்து உயிர்த்தபின் அதாவது ஒரு கட்புலனாகா உடலோடு அவர் சுற்றிய 40 நாட்களில் என்ன செய்தார்?

போதித்தாரா? இல்லை யூத குருவுடன் மல்லுக்கு நின்றாரா?

இல்லை , பைபிளை நன்றாக கவனியுங்கள்

உயிர்த்த இயேசு முதலில் மதலேன் மரியாளுக்கு தோன்றினார், அந்த அம்மணி அவர் காலை பிடித்து அழுதது

என்னை விடு என உடனே கிளம்பிய இயேசு கடற்கரைக்கு சென்று மீன் சாப்பிட்டிருக்கின்றார்

அவ்வளவுக்கு அவருக்கும் மீனுக்குமான பிணைப்பு இருகின்றது

இதோ இயேசு உயிர்த்துவிட்டார், உயிர்த்த அவர் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் தேடி வருவார் என சர்ச்சில் சொல்கின்றார்கள்

இந்த படுபாவியினை தேடி வந்தால் அவருக்கு கொடுக்க மீனை தவிர எது பொருத்தமாக இருக்க முடியும்?

இதோ சங்கம் மீன்கடை நோக்கி ஓடுகின்றது