சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது செய்யபட்டிருக்கின்றார்

அன்னார் அசாமின் உல்பா இயக்கத்துக்காரர் அங்கு நாசவேலை செய்துவிட்டு சென்னைக்கு வந்து பாஷாபாய் போல திரிந்திருக்கின்றார்

வடமாநில தொழிலாளர் நிறைய வேலை செய்வது அவருக்கு வசதியாயிற்று

எனினும் மிக நுட்பமாக தொடர்பு கொண்ட காவல்துறை அவனை அமுக்கி சாக்கில் போட்டு கொண்டுபோய்விட்டது

இது உல்பா என விட்டுவிட முடியாது,

காரணம் உலகின் எல்லா தீவிரவாத குழுக்களுக்குள்ளும் ஒரு ரகசிய தொடர்பு உண்டு,

இவர்கள் அவர்களுக்கு ஏதும் செய்வார்கள், அவர்களுக்கு இவர்கள் செய்வார்கள், அவர்களின் நண்பர்களுக்கு இவர்கள் செய்வார்கள் என அதன் எல்லை விரிந்துகொண்டே இருக்கும்

அதுவும் இந்தியா போன்ற நாட்டுக்கு எதிராக ஏகபட்ட தீவிரவாத குழுக்கள் இருக்கும்பட்சத்தில் பல காரணங்களுக்காக ஒன்று சேருவார்கள்

2001க்கு பின்பு ஒரு தீவிரவாத பயலும் இருக்க கூடாது என அமெரிக்கா வாளோடு திரிந்தது அதனால்தான்

இதே உல்பா உட்பட வடகிழக்கு தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்குமே தொடர்பு இருந்த காலம் எல்லாம் உண்டு

தமிழகத்தில் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடிபடுவது நல்ல விஷயம் அல்ல‌

இன்னும் பலத்த பாதுகாப்பும் இறுக்கமும் அவசியம்