இலங்கையில் மத நல்லிணக்கம்
இலங்கையில் மத நல்லிணக்கம் பேண நாடும் நாட்டு மக்களும் மிகுந்த சிரத்தை எடுக்கின்றார்கள்
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளி வாசல் எங்கும் கடுமையான பாதுகாப்பினை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது
இஸ்லாமியர்களை நாம் அரவணைக்க வேண்டிய நேரம் இது என்கின்றார் மைத்திரிபாலா
இந்த இடத்தில் இஸ்லாமியர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் மிக உருக்கமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்
அதாவது கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் பொழுது நாங்கள் மசூதியில் தொழுகை செய்வது அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதால் வீட்டிலேயே தொழுது கொள்கிறோம் என அறிவித்திருக்கிறார்கள்
இலங்கை இஸ்லாமியர்கள் நிச்சயம் வாழ்த்து வாழ்த்துக்கு உரியவர்கள்
உண்மையான இஸ்லாம் எது என்பதை அவர்கள் உலகிற்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த ஒற்றுமையில் வலிகளை தாண்டி அந்த தேசம் எழும்பட்டும் செழிக்கட்டும்
இலங்கை இஸ்லாமிய பெருமக்களிடமிருந்து இந்த உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது