கடும் எச்சரிக்கை

இலங்கையில் இன்னும் தாக்குதல் நடத்த படலாம் என கடும் எச்சரிக்கை விடுதிருக்கின்றது அமெரிக்கா

அமெரிக்காவினை விட இஸ்ரேலின் எச்சரிக்கையே கடும் அச்சம் கொடுக்கின்றது, ஆம் இலங்கையின் இஸ்ரேலியருக்கு மிக மிக உச்சபட்ச எச்சரிக்கையினை அந்நாடு கொடுப்பது சரியான அறிகுறி அல்ல‌

பிடிபடும் ஆயுதமும் கொல்லபடும் நபர்களிடமிருந்து கைபற்றபடும் தகவலும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் ரகம்

கொழும்பு மட்டுமல்ல, மொத்த இலங்கையினையே ஆப்கன் போல நாசமாக்கும் பெரும் சதிதிட்டம் இது

ஆடிப்போய் இருக்கின்றது சிங்கள உச்சபீடம்

நிலமை இன்னும் சரியாகவில்லை எனினும் கடும் சோதனையிலும் இறுக்கமான நடவடிக்கையிலும் யாழ்பாணம் முதல் கொழும்புவரை பலர் கைது செய்யபட்டும் வெடிபொருள் மீட்கபட்டு கொண்டிருக்கின்றது

ஆனாலும் அமெரிக்கா உச்சகட்ட அறிவிப்பு வெளியிட்டிருப்பதும் இஸ்ரேல் அதனை ஆமோதித்திருப்பதும் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன