வேறு எதுவுமாக இருக்கவே முடியாது
முகமது நபியின் புனிதமான போதனையினையும், அவருக்கு பின் வந்த புனிதமான கலீப்பாக்களின் ஆட்சியினையும் படித்து பாருங்கள்
இஸ்லாம் அல்லாதவரை கொல்லுங்கள் என எங்குமே அவர்கள் சொல்லவில்லை
இஸ்லாமிய வரலாற்றில் முகமது நபி காலம் முதல் ஆட்டோமன் துருக்கியர் மொகல் காலம் வரை எல்லா காலத்திலும் எல்லா மதத்தாரும் வாழ்ந்திருக்கின்றனர்
இவ்வளவுக்கும் இஸ்லாமியரின் பரம வைரியான யூதர்களே நபி காலத்தில் இருந்து ஆட்டோமன் காலம் வரை பாதுகாப்பான வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர்
மிக சிறந்த இஸ்லாமிய மன்னரான சலாவுதீன் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் எல்லா பாதுகாவலையும் வழங்கியிருக்கின்றார்
இந்தியாவின் அக்பர் இந்துக்களுடன் நல்லுறவினை பேணியிருகின்றார்
எல்லா புகழ்பெற்ற இஸ்லாமிய மன்னருக்கும் ஆட்சி சிறக்க எல்லா மதத்தாரையும் அனுசரித்து செல்லும் அணுகுமுறை தெரிந்திருக்கின்றது
அதைவிட முக்கியம் எது உண்மையான இஸ்லாம் என மிக கவனமாக தெரிந்து பின்பற்றியிருக்கின்றார்கள்
இஸ்லாம் போதனையில் எங்கும் இஸ்லாம் அல்லோதரை கொல்லுங்கள் என சொல்லவே இல்லை
ஒருவேளை இவர்களாக ஒரு வரியினை அப்படி காட்டினால் அது “சாத்தானின் வரிகள்” அன்றி, வேறு எதுவுமாக இருக்கவே முடியாது.