விஷயம் இதுதான்

இந்திய உளவுதுறை எப்படி இலங்கை தாக்குதலை முன்பே அறிந்தது என்பதை நேற்று வெளியான பல தகவல்கள் உங்களுக்கு புரிய வைத்திருக்கலாம்

ஆம் ஐ.எஸ் இயக்கத்தவனாக இலங்கையில் தாக்குதல் நடத்திய அக்கும்பலின் தலைவன் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிலரை சந்தித்தான் என்ற விசாரணையும் செய்திகளும் நேற்று பரபரப்பினை கிளப்பின‌

விஷயம் இதுதான்

ஐ.எஸ் இயக்கத்தில் தமிழ்நாட்டு நபர்கள் உட்பட இந்திய நபர்கள் பலர் இருந்திருக்கின்றனர், சிரிய பக்கம் அவர்கள் பயிற்சி பெறும்பொழுதுதான் இலங்கையரின் தொடர்பும் ஏற்பட்டிருக்கின்றது

இலங்கையரை அங்கு அனுப்பியது இன்னொரு தெற்காசிய நாடு, கொழும்பில் அவர்களை தேர்ந்தெடுத்து அங்கு அனுப்பியிருக்கின்றார்கள்

அங்கு இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கின்றது, கொலைகார நட்பு அல்லவா? அது பலபட்டிருக்கின்றது

இந்நிலையில் இந்த தமிழ்நாட்டு தீவிரவாதி இந்தியா திரும்பி தன் திருப்பணியினை தொடங்க ஆயத்தமாகி அடிக்கடி இலங்கையருடன் பேசியிருக்கின்றார்

இவரை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்த இந்திய உளவுதுறை அவரை கண்காணித்தது, அவர் இலங்கையருடன் பேசிய பேச்சினை இடைமறித்து விஷயத்தை அறிந்தது

தற்கொலை தாக்குதல் நடத்தபோகும் நபர், நாள், இடம் உட்பட சகல விஷயங்களையும் இந்தியா சொன்னது, ஆனால் கொழும்பு அலட்சியம் செய்தது

இந்தியாவின் நோக்கம் கொழும்பு தாக்குதலை தடுப்பது அல்ல மாறாக இந்திய தூதரகத்தை காப்பது என்பதால் அதை மிக வலுவாக தற்காத்து கொண்டது

இந்த சம்பவத்தின் தொடர்ச்சிதான் நேற்று தமிழகத்தில் கசிந்த விஷயங்கள்

ஏன் இப்பொழுது கசிய விடுகின்றார்கள்?

இங்கு இனி மிக கடுமையான களையெடுப்பும் , கைதுகளும் நடக்க இருப்பதால் முன் கூட்டியே விஷயத்தை மெல்ல வெளிவிடுகின்றார்கள்

இது கமலஹாசன் மகிழ்ச்சி கொள்ளும் நேரம்

ஆம் தமிழகத்தில் சர்வதேச பயங்கரவாதி இருப்பதாக தன் விஸ்வரூப படத்தில் கமல் சொல்லிவிட்டார் என இஸ்லாமிய அமைப்புகள் பொங்கின‌

அவை எல்லாம் இப்பொழுது தீகோழி போல தலையினை மண்ணுக்குள் புதைத்து ஒளிந்துகொண்டிருக்கின்றன