எதற்கெடுத்தாலும் அழுகை என்றால் எப்படி?
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை
இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார்
ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன
நாட்டுக்காக அவர் செய்யும் பல விஷயங்களுக்காக தான் கொல்லபடுவோம் என அஞ்சினார்
ராஜிவும் ஒரு கருப்பு சக்தி என்னை குறிவைக்கின்றது என சொல்லிகொண்டேதான் இருந்தார்
இவரை யார் குறிவைத்தார்கள்? அல்லது குறிவைக்கபடும் அளவு என்ன சாதித்தார்?
இப்படி ஒரு அழுகாணி பிரதமரை பாரதம் கண்டதே இல்லை
எதற்கெடுத்தாலும் அழுகை என்றால் எப்படி? அழுவதற்கா இவரை தேசம் பிரதமராக்கியது?
இதை எல்லாம் தொடங்கி வைத்தது யாரென்றால் அந்த சன்டிவியும் கலைஞர் கைது காட்சிகளும்
“அய்யய்யோ கொலை பண்றாங்க” என்ற கோபாலபுரத்து அலறல்தான் இன்று மோடிக்கு வழிகாட்டுகின்றது