அறிவின் உந்துதலில் ஆத்ம திருப்திக்காக எழுதினான்
சுஜாதாவினையும் திராவிட சிங்கங்கள் விடவில்லை, சுஜாதா ஒரு பார்ப்பானிய வெறியர், சிந்தனையாளர் என வழக்கம் போல பொய்பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள்
அவர் எழுத்தில் சமூக நீதி இல்லையாம், பார்ப்பானிய ஆதிக்கம் இருந்ததாம்
அந்த திராவிட கும்பலுக்கு ஒரே ஒரு கேள்விதான்
சுஜாதா சமூக நீதி எழுதாதவராகவே இருக்கட்டும், ஆனால் அவரின் சொத்து கணக்கு சமூக நீதியினை பக்கம் பக்கமாக எழுதி அதில் அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடியினை எல்லை இல்லா தலைமுறைக்கு சேர்த்துவிட்டவர்களின் சொத்து மதிப்பில் ஒரு குண்டூசிக்கு ஈடாகுமா?
அவன் பணத்துக்காக எழுதவில்லை, அறிவின் உந்துதலில் ஆத்ம திருப்திக்காக எழுதினான்
யதார்தத்தை உணர்ந்து எழுதினான், ஏராளமானோரின் மனதை தொட்டான்
மானமுள்ள எழுத்தாளன் அவன், தன் எழுத்தின் வீரியத்தில் என்ன சம்பாதித்தான்?, அல்லது யாரிடம் கையேந்தி நின்றான்
பழைய ரிஷிகளின் ஞானிகளின் பெருந்தன்மையின் கடைசி வரிசை சுஜாதா
தப்பான பிரச்சாரமோ இல்லை சுயநலத்தில் மொத்த சமூகத்தையும் தன் பக்கம் திருப்பி அதில் சுரண்டி கொழுக்கும் அசிங்கத்தை அவன் செய்யவில்லை
அவனின் சொத்துக்களையும் திராவிட சிங்கங்களின் சொத்துபட்டியலையும் ஒப்பிட்டு பாருங்கள்
அதன் பின் பேசவே மாட்டீர்கள்