அதுதானே கிறிஸ்துவ வழி
இந்த கிறிஸ்தவ வழிபாட்டில் சில திருத்தங்களை செய்யவேண்டியிருகின்றது
இந்த திருப்பலி என்பது என்ன? யூத வழிபாட்டில் முன்பு ஒரு ஆட்டை வெட்டி பலிகொடுப்பார்கள் அதன் பின்பு அனைவரும் அதை அப்பத்தோடு உண்பார்கள்
பலி என்பது அதுதான், ஆடு பெரும்பான்மை எனினும் மாடும் சில நேரம் உண்டு. பாஸ்கா எனும் விழாவில் அது உண்டு
கிறிஸ்துவும் இதை தன் கடைசி விருந்தில் கொடுத்திருக்கின்றார், அப்பமும் ஒயினும் ஆட்டுகறியுமாக பங்கு வைத்திருக்கின்றார்
கிறிஸ்தவம் தோன்றும்பொழுது கிறிஸ்து நினைவாக அவர் கடைசியாக விருந்து வைத்த நினைவாக கிறிஸ்தவ ஆலயங்களில் முதலில் அப்பம் எனும் ரொட்டியும் ஒயினும் ஆட்டுகறியும் கொடுக்கபட்டது என்கின்றார்கள்
பின்பு அப்பமும் ஒயினும் என மாறிற்று
பின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பட்ஜெட் தாங்காமல் ஒயின் நிறுத்தபட்டு அப்பம் என்பது 10 ரூபாய் காயின் அளவு ஒரு சிறிய வெள்ளை அடையாளமாக மாறிவிட்டது
ஆம், இதுவா கிறிஸ்து சொன்ன கிறிஸ்தவம்? இல்லவே இல்லை
இயேசு எப்படிபட்ட இரக்கம் உள்ளவர்? தன் செய்தி கேட்க வந்த மக்கள் பசியாய் இருக்க கண்டு அப்பமும் மீனும் பலுகி பெருக செய்து அவர்களுக்கு பசி தீர்த்தவர்
இந்த ஞாயிற்றுகிழமை தூக்கத்தை விட்டு இன்னும் என்னவெல்லாமோ விட்டு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு, பசியோடு செல்லும் மக்களுக்கு குருமார்கள் என்ன செய்யவேண்டும்?
இயேசுவின் போதனையினை மட்டும் சொன்னால் போதுமா? அவர் செய்தது போல் செய்ய வேண்டாமா?
சிலம்ப கலைஞன் ஒரே கம்பை பலவிதமாக சுழற்றுவது போலவும், சர்க்கஸ் மங்கையர் ஒரே வளையத்தை பலவிதமாக சுழற்றி சாகசம் காட்டுவது போல ஒரே பைபிளை புரட்டி புரட்டி சாகசம் செய்கின்றார்களே தவிர வேறு ஒன்றுமில்லை
இயேசு செய்ததை செய்கின்றோம் என்பவர்கள், இயேசு போல ரொட்டியும், ஒயினும் ஆட்டுகறியும் தரவேண்டாமா?
அதுதானே கிறிஸ்துவ வழி
அதைவிடுத்து அப்பம் என ஒரு ஓலை பண்டத்தின் துளியில் ஒன்றை கொடுப்பது எங்கண நியாயம்?
ஆக இனி திருப்பலியில் பர்கர் அல்லது ஒரு துண்டு பீட்சாவும் ஒரு கப் ஒயினும் வழங்கபட வேண்டும் என கிறிஸ்த ஆலயங்களுக்கு கோரிக்கை வைக்கபடுகின்றது
உடனே இந்த மறுமலர்ச்சியினை கிறிஸ்தவ சமூகம் செய்தாக வேண்டும்
இல்லை என்றால் அடுத்த தற்கொலை தாக்குதல் ஐ.எஸ் இயக்கத்தால் நடத்தபடாது
பசியோடு அவர்களின் பைபிள் கழுத்தறுப்பை பொறுக்கமுடியாமல் அமர்ந்திருக்கும் ஒரு கிறிஸ்தவனாலே கூட நடத்தபடலாம்
இனி பீட்சா பிய்க்கபட்டு ஒயின் வழங்கபடட்டும் , அதற்கும் மேல் கிறிஸ்துவினை போல் மீனும் வழங்கினால் கூடுதல் மகிழ்ச்சி
பரமண்டலங்களில் இருக்கும் கர்த்தரும் கிறிஸ்துவும் இன்னும் அதிகமாக மகிழ்வார்கள்