வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த இலங்கை ராணுவதளபதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றோம்

அந்த தளபதி தங்களின் கையாலாகாத தனத்தையும் இன்னும் பல விஷயங்களை மறைக்கவும் கொழும்பு தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாக பேட்டி அளித்திருக்கின்றார்

இது வன்மையாக கண்டிக்கதக்கது

இலங்கையில் பாகிஸ்தானின் நடமாட்டட்த்தையும் அங்கு ஐஎஸ் இயக்கத்தின் ஆட்கள் வந்து செல்வதையும் எத்தனையோ முறை சொல்லி எச்சரித்த நாடு இந்தியா

அப்பொழுதெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, நன்றாக பலகாரம் தின்றுவிட்டு இப்பொழுது விபரீத விலை கொடுத்தபின் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றார்கள என்பது எங்கணம் நியாயம்?

ஒவ்வொரு இந்தியனும் இதை வன்மையாக கண்டிக்கின்றான், சர்வதேச அளவில் இந்தியாவினை தீவிரவாதிகளின் நாடு போல சித்தரிக்கும் இப்பேச்சு நிச்சயம் அநாகரிகமானது

நிச்சயம் அவர்களுக்கு பயிற்சி அளித்தது யார்? எந்த நாட்டு மத குருமார்கள் உட்பட எல்லா விவகாரமும் சிங்கள தளபதிக்கு தெரிந்தும் ஏன் இந்த திசை திருப்பல்

அவரின் இந்திய வெறுப்பு அப்படி

இது அந்நாட்டுக்கு நன்மையினை ஒருகாலமும் கொண்டுவராது

எனினும் புலிகள் ஒருகாலத்தில் சிங்கள ஆர்மியினை பற்றி சொன்னதுதான் சரி

“மொக்கை சிங்களவன்…. பலகாரம் தின்பதில் மட்டும் சூரன்”