மொத்தத்தில் சென்னை மக்கள் நிலை பரிதாபம்..

ஜெகன்மோகன் ரெட்டியினை சந்தித்த ஸ்டாலின் சென்னைக்கு கிருஷ்ணாநதி நீரை இந்த குடிநீர் பஞ்சத்திலும் கேட்கவில்லை வலியுறுத்தவில்லை எனபது சோகம்

ஸ்டாலினின் மிகபெரும் சறுக்கல் அது, வாய்பினை தவறவிட்டுவிட்டார்

உண்மையான தமிழக பொறுப்பான தலைவர் என்றால் அதை அவர் கேட்டிருக்கலாம், அட்டகாசமான அரசியலும் செய்திருக்கலாம்

அவரின் அரசியல் அறிவு அவ்வளவுதான்

இதை கலாய்க்க வரும் தும்பிகள் கூட ஸ்டாலின் தெலுங்கில் பேசினார் என்றுதான் கலாய்க்கின்றன, கிருஷ்ணா நீர்பற்றி சத்தமே இல்லை

அவர்கள் இவர்களை விட மகா மோசம்

இந்த பாஜகவினரும் ஸ்டாலின் பொட்டு வைத்த வட்டநிலா என்றுதான் பாடுகின்றார்களே தவிர அவர்களுக்கும் தெலுங்கு கங்கை கிருஷ்ணா நதிபற்றி யோசனை இல்லை

அவர்கள் இந்த இருவரையும் விட சுத்தம்

பழனிச்சாமி என்பவர் திருப்பதி சாமியினை கும்பிடுவதோடு சரி..

மொத்தத்தில் சென்னை மக்கள் நிலை பரிதாபம்..