பட்நாயக்கின் புதிய ஒடிசா..

ஒரு காலத்தில் பின் தங்கிய மாநிலமாக இருந்த ஒரிசா , ஒடிசாவாக மாறி ஆச்சரியங்களை கொடுக்கின்றது

நவீன் பட்நாயக் ஒடிசாவின் அசைக்கமுடியா தலைவராகிவிட்டார், மூன்றாம் முறையாக பதவியில் அவரும் அவர் காலம் வழிவிட்டால் நிச்சயம் ஜோதிபாசுவின் சாதனைகளை முறியடிப்பார்

ஒடிசா அவரை தயக்கமே இன்றி நிரந்தரமாக அமர்த்திகொண்டது

தந்தை பிஜு பட்நாயக் போட்டு கொடுத்த அடித்தளத்தில் இன்னும் திருமணம் செய்யாமல் ஒடிசா மக்களுக்காக உழைக்கும் அவரை மக்களுக்கு நிரம்ப பிடித்திருக்கின்றது

பல துறைகளில் ஒடிசா மகா வேகமாக முன்னேறி வருகின்றது, நிச்சயம் அங்கு மாபெரும் வளர்ச்சி

இப்பொழுதும் பாருங்கள் மிக எளிய எம்பி என ஒடிசாவில் இருந்துதான் ஒரு சாமான்ய மனிதனை அனுப்பியிருக்கின்றார்கள் ஒரியர்கள்

ஆம் ஓலை குடிசையில் ஓட்டை சைக்கிளில் சுற்றிய அவரை எம்பி என அனுப்பியிருக்கின்றது அம்மாநிலம்

வாரிசுகள் அப்படி உருவாக வேண்டும்

இதோ இந்த நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் அக்கால திமுக போல காங்கிரஸ் எதிர்ப்பு நிலையினை கொண்டிருந்தார்

திமுகவினை அதிமுகவினை இணைத்து மாநில சுயாட்சி குரல் எழுப்ப‌ அவர் பட்டபாடுகள் ஏராளம்

ஆனால் மாநில சுயாட்சி பேசி மாநிலம் பின் தங்கி போனதை அனுபவ பூர்வமாக பின்னாளில் உணர்ந்தார்

பிஜூ பட்நாயக் அரசியலுக்கு வந்ததும் தந்தை வழியன்றி மத்திய அரசோடு இணக்கமான போக்கே மாநிலத்திற்கு வெற்றி அளிக்கும் என்பதை உணர்ந்தார்

அந்த அட்டகாசமான அணுகுமுறையில்தான் இந்த மாபெரும் வெற்றி அவருக்கு கிடைத்தது

ஆம் மாநிலத்துக்கு எது நலமோ அதை செய்ய வேண்டும், மற்றபடி கண்டதையும் பேசிகொண்டிருப்பது விஷயம் அல்ல‌

அதில்தான் நவின் ஜொலிக்கின்றார், முக ஸ்டாலின் பின்னால் சென்று தவிக்கின்றார்

நிச்சயம் நவீன் பட்நாயக், முக ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு எல்லாம் ஒரே வரிசை சந்தேகமில்லை

ஆனால் நவீனுக்கு நாடிபிடிக்க தெரிகின்றது, மாநிலத்துக்கு எது தேவை என்பதை உணரமுடிகின்றது, யாரை ஆதரித்தால் இங்கு நன்மை விளையும் என கணிக்க முடிகின்றது

அதனால் அவர் வரலாறாய் ஆகிகொண்டிருக்கின்றார், மற்ற இருவரும் தவியாய் தவிக்கின்றார்கள்

இன்றைய இந்தியாவில் ஒரு முதல்வர் மிகசிறந்த முறையில் மாநிலத்தை தேசத்தோடு சேர்ந்து நடத்துகின்றார் என்றால் அது அந்த நவீன் பட்நாயக் ஒருவர்தான்

அதனால்தான் அவர் சொன்ன பாதையில் வாக்குகளை குவித்து அணிதிரண்டு நிற்கின்றது ஓடிசா

பட்நாயக்கின் புதிய ஒடிசா..