மோடிக்கும் அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்
இரண்டாம் முறையாக சிங்கம் போன்ற அசுர பலத்துடன் பதவிஏற்றிருக்கின்றது மோடி அரசு
இந்திய வரலாற்றில் இது ஒருவகை சாதனையும் கூட
1987களில் தொடங்கிய கூட்டணி குழப்பத்திற்கு 2014ல் முடிவு கட்டிய இந்தியா 2019 தேர்தலிலும் அதை தொடர்ந்திருகின்றது
நாம் இந்தியர்கள், இந்திய கண்ணோட்டத்தில் இப்படித்தான் சொல்லமுடியும்
சுதந்திரத்திற்கு பின் இந்தியா உடையும் என்றார்கள் நேரு காத்தார், அவருக்கு பின் சாஸ்திரி
சாஸ்திரிக்கு பின் அவ்வளவுதான் என்றார்கள் இந்திரா வந்தார்
இந்திரா தலைகணம் பிடித்து ஆடுகின்றார் இனி இந்தியா சிதறும் என்றார்கள், ஆனால் இந்தியா அவரிடமே சரண்டைந்தது
ராஜிவ் பலமாக எழும்பினாலும் அது குறுகிய காலமே
விபிசிங் காலத்தில் இருந்து குழம்பியது இந்தியா, அது 2014 வரை நீடித்தது
இந்தியாவில் இருக்கும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்திஅதை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என பகிரங்கமாக மிரட்டினான் சீன அமைச்சர் ஒருவர்
அமெரிக்கா அதை மனமார ரசித்தது
இனி எந்த தனிபெரும் தலைவனும் உறுதியான அரசும் அமையபோகின்றது என உலகம் நினைத்த நேரத்தில் மோடி வந்தார்
ஏகபட்ட சர்ச்சைகள் அவர் மேல் குவிக்கபட்டன, பிரம்ம ராட்சசன் போல அவர் இங்கு காட்டபட்டார்
ஆனால் மக்கள் மிக தெளிவாக அவரையே தேர்ந்தெடுத்தனர், உலகிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது இந்தியா
மோடிக்கும் அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்
ஊழலில்லா ஆட்சியினை அவர்கள் கொடுப்பார்கள் என்பது தெரியும், கொஞ்சமும் மத துவேஷமில்லா மத ரீதியான மிரட்டல்கள் இல்லா ஆட்சியினை அவர்கள் கொடுக்கட்டும்
ரமலான் மாதத்தில் பதவிஏற்றிருக்கும் மோடி இஸ்லாமிய மக்களையும் அணைத்து செல்லும் தலைவராக மாறட்டும்
அவர்களின் நெஞ்சிலுள்ள தழும்புகளை ஆற பாடுபடட்டும்
தேசம் அவரிடம் மிகவும் எதிர்பார்க்கின்றது, அவரை நம்புகின்றது
அந்த நம்பிக்கையினை அவர் காப்பாற்றி நல்லாட்சி நடக்கட்டும், அமைச்சர்களும் பொறுப்புணர்ந்து அவருக்கு பலமாய் நிற்கட்டும்
தேசத்தை மோடி வணங்கும் தருணம் , தேசமும் அவரை வணங்கி வாழ்த்தி நாற்காலியில் அமர வைக்கின்றது.
நாடு செழிக்கட்டும், அமைதி நிலவட்டும், பாரதம் உயரட்டும்
