செய்தி சொல்வதென்ன?
சீனா இலங்கையில் கால்பதிக்கும் நேரம், இது ஒன்றும் புதிதல்ல என வரலாற்று உண்மைகளை அள்ளிவிடுகின்றன பல பத்திரிகைகள்
அதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா இல்லை இலங்கைஇருக்கின்றதா என்றால் நிச்சயம் சீனா இருக்கலாம்
செய்தி சொல்வதென்ன?
அதற்கு முன் வரலாற்றையும் பார்த்துவிடலாம் , தமிழன் மட்டுமே கப்பல் செய்தான், தமிழன் மட்டுமே கப்பல் படை வைத்திருந்தான் என்பதெல்லாம் வடிகட்டிய பொய், மேடைக்க்கான அரசியல் பொய்
உண்மையில் கடல் அருகே இருந்த எல்லா இனமும் கப்பல் வைத்திருந்தன, சோழனுக்கு 1000 வருடம் முன்பிருந்த ஜூலியஸ் சீசரே வைத்திருந்தான்
சீசர் என்ன? சிங்களரின் பிதாமகன் விஜயனே கப்பலில்தான் தன் பரிவாரங்களோடு இயேசு காலங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்தான் என்கின்றது ஆய்வு
அப்படி சீனரிடமும் கடல் சாகச வரலாறு உண்டு, சீன கப்பல்கள் கேரளாவுக்கு வந்த காட்சிகள் உண்டு, சீன ஆலய சாயலும் கூரையும் கேரளத்தில் இந்துஆலயங்களாக அமைந்திருப்பதை ஆழ கவனித்தால் உங்களுக்கே புரியும்
அப்படிபட்ட சீனா இலங்கையிலும் வியாபாரம் செய்தது, அப்பொழுது கோட்டை கட்டி ஆண்ட தமிழ் மன்னன் ஒருவனுக்கும் சீனருக்கும் சண்டை எல்லாம் வந்திருக்கின்றது
கொலம்பஸ், வாஸ்கோடகாமா போல சீனருக்கும் ஒரு கடலோடி உண்டு அவன் பெயர் செங்க் ஹோ
15ம் நூற்றாண்டு அவனின் காலம்
இந்த செங் ஹோ என்பவனுக்கும் இலங்கையின் கிழக்கு பகுதியினை ஆண்ட மன்னனுக்கும் நடந்த போரில் அவனை வீழ்த்தி குடும்பத்தோடு அவனை சீனாவுக்கு நாடுகடத்திய சம்பவமெல்லாம் நடந்திருக்கின்றன
செங்க் ஹோவால் வீழ்த்தபட்ட மன்னன் பெயர் என்ன தெரியுமா ?
அழகேஸ்வரன்
கோட்டா நாட்டின் தலைவன் அழகேஸ்வரன் என்பவனை சிறைபிடித்து சீனாவுக்கு இழுத்து வந்த செங்க் ஹோ என சீனாவில் அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டு சொல்கின்றது
கோட்டா என்பது கோட்டை எனும் சொல்லாக இருக்கலாம் என்கின்றார்கள், கிழக்கு இலங்கையின் ஏதோ ஒரு கோட்டை
அம்மன்னன் தமிழனாக இருந்திருக்கலாம், பெயர் அப்படித்தான் தெரிகின்றது
ஆக தமிழன் ஒருவனை சீனன் பிடித்து சென்றிருக்கின்றான் , தும்பிகள் இதை எப்படிதாங்குமோ தெரியாது, செத்தாலும் சாகலாம்
விஷயம் சொல்லவருவது இதுதான்
சீனா இலங்கைக்கு வருவது புதிதல்ல, போர்த்து கீசியர் காலத்துக்கு முன்பிருந்தே இலங்கைக்கு அது தொடர்பான நாடு
அழகேஸ்வரன் காலத்தில் இலங்கையின் ஒரு பகுதியினை அது ஆண்டிருக்கின்றது
போர்ச்சுக்கல், ஹாலந்து வரிசையில் அமெரிக்கா இலங்கையில் கால்பதிக்க உரிமை உண்டென்றால், திரை கடல் ஓடியும் அரை கொடுத்த சீனாவுக்கும் உரிமை உண்டு, உறவும் உண்டு என்பதுபோல் செய்திகள் வருகின்றன
சீனா இப்படி வரலாற்றை தோண்டினால் இனி இந்தியாவும் சோழர் பாண்டியர் வரலாற்றை தோண்ட வேண்டும்
அதில் மோடி தீர்க்கதரிசி, ஏற்கனவே சோழர் பற்றியும் கடற்படை பற்றியும் இந்தியர்கள் பெருமை பற்றியும் அவர் சில இடங்களில் பேசியிருப்பதால் இந்தியாவுக்கு சிக்கல் இல்லை
