மங்கம்மாள்

தென் தமிழகத்தை பாண்டிய மன்னனின் வீழ்ச்சிக்கு பின் ஆளவந்தது நாயக்கம் வம்சம்

அதில் விஸ்வநாத நாயக்கன் தொடங்கி, திருமலை நாயக்கன் மஹாலை எல்லாம் கட்டிய பின் அந்த தலைமுறையில் வந்தவன் சொக்கநாத நாயக்கன், அவன் மனைவிதான் மங்கம்மா

அவள் ராணுவதளபதியின் மகளாய் இருந்ததால் வீரம் இயல்பாய் இருந்தது. அரசகுடும்பத்தை சாராதவளாயினும் மங்கம்மாளை திருமணம் செய்தான் மன்னன்

சொக்கநாத நாயக்கன் இறக்கும்பொழுது அவன் மகனுக்கு சிறிய வயது என்பதால் மங்கம்மா ஆட்சிபொறுப்பாளர் ஆனார்

ராணி அல்ல மாறாக ஆட்சி அவர் வசம் இருந்தது

ஒரு கட்டத்தில் மகன் முத்துவீரப்ப நாயக்கன் மரித்துவிட தன் பேரன் ஆட்சிக்கு வரும் வரைக்கும் ராணியாக வந்தாள்

மங்கம்மாவின் முன்னோடி ராணி ருத்ரம்மா , அவள் காகதீய பேரரசு எனும் ஆந்திர ராணி. அவளின் சாயல் மங்கம்மாளிடம் நிறைய இருந்தது

நாயக்க மன்னர்களில் இல்லை இல்லை மதுரையினை ஆண்ட அரசுகளிலே தலைசிறந்த அரசு மங்கம்மாளுடையது

மதுரை சாம்ராஜ்யத்தை 72 சீமைகள் அதாவது (சேர்மை) என பிரித்தார் மங்கம்மா, நிர்வாகம் இதனால் சீரானது

வறண்ட பகுதியில் ஏராளமான குளங்களை உருவாக்கினார், அது வயல்கள் கழனிகள் என செழித்தன‌

தென்னக வறண்ட நிலத்தின் ஏரி குளங்கள் எல்லாம் அவர் காலத்தில் உருவானதே

மங்கம்மாளின் மகத்தான சாதனை சாலைகளை உருவாக்கியது, ரோமை சாம்ராஜ்யத்தில் அத்தனை சாலையும் ரோமுக்கு என்பது போல மங்கம்மாள் காலத்தில் அத்தனை சாலைகளும் ஆலயங்களை இணைப்பதாக இருந்தது

தென்னகத்தின் பிராதன ஆலயங்களை இணைக்கும் மங்கம்மாள் சாலை இன்றும் உண்டு, அது திருச்செந்தூர் உட்பட பல முக்கிய ஆலயங்களை இணைக்கும் வழி

இந்த சாலை வந்தபின்புதான் சாத்தூரும், விருதுநகரும் வணிக மையங்களாயிற்று, மங்கம்மாளின் பெரும் சாதனை அது

சாலை அமைத்தது பெரிதல்ல, அதன் ஓரம் மரங்களை நட்டார் , வண்டிமாடுகளும் பயணிகளும் ஓய்வெடுக்க சத்திரங்களை அமைத்தார்

மாட்டு தாவாணி என்பது அப்படி உருவாயிற்று, மங்கம்மாள் சத்திரங்கள் இன்றும் உண்டு

அவள் ஆட்சி மதுரையின் பொற்கால ஆட்சி, பாதுகாப்பு, ஆன்மீகம், வியாபாரம், கலை என எல்லாம் செழித்து வளர்ந்தது

அவள் பல போர்களையும் நடத்தினாள், திருச்சி நாயக்கருக்கு ஆதரவாக மைசூருடன் போர் நடத்தி காவேரியினை மீட்ட மைசூர் போர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நடத்திய போர் என பல போர்கள் பிரசித்தி பெற்றன‌

பின்னாளில் தஞ்சை மராட்டியருக்கும் மதுரை நாயக்கருக்கும் மோதல் வர, தஞ்சை மராட்டியரை ஒடுக்கி வைத்தவளும் அவளே

இல்லையெனில் மராட்டியர் ஆட்சி மதுரைக்கும் வந்திருக்கலாம்

மராட்டியருக்கும் அவளுக்குமான போர்காலங்களில் மொகலாய படைகள் தென்னகம் பாய்ந்து தமிழகத்தை விழுங்க இருந்த ஆபத்தை சமாதானமாக பேசி திருப்பிவிட்டவளும் அவளே

எம்மால் உறுதியாக சொல்லமுடியும் 18 ஆண்டுகாலம் மதுரையினை ஆண்டு நின்ற மீனாட்சியின் வடிவம் அவள்

இங்கு சாதாரண‌ மணியம்மை முதல் ஏ1 குற்றவாளி வரை பல பெண்களை கொண்டாடுபவர்கள் மகாராணியும் மிகபெரும் சக்தியாக வாழ்ந்த மங்கம்மாளை மறந்துவிடுவது என்பது கண்டிக்கதக்கது

மங்கம்மாள் காட்டிய வழியில்தான் பின்னாளில் வேலு நாச்சியார் வந்தாள்

ஜான்சிராணி மங்கம்மாள் காலத்துக்கு பிந்தையவள், ஆனால் அவளை தெரியும் அளவு மங்கம்மாளை யாருக்கும் தெரியாது

மங்கம்மாள் திருச்சி முதல் ஆரல்வாய்மொழி வரை பெரும் அடையாளங்களை கொண்டிருந்தார்

அவரின் திருச்சி மாளிகை இன்று ஏதோ அரசு அலுவலகமாயிற்று

மதுரையில் அவள் வாழ்ந்த மாளிகை காந்தி மியூசியமாயிற்று

நிச்சயம் வரலாறை நோக்குபவர்கள் அதில் வருந்துவார்கள், ஆம் தனியே கட்டடம் கட்டித்தான் காந்திக்கு மியூஸியம் அமைத்திருக்க வேண்டும்

திருமலை மகால் போலவே மங்கம்மாள் மாளிகை தனி அடையளமாக தொடர்ந்திருக்க வேண்டும்

எப்படிபட்ட மாதசி மங்கம்மாள்?

அவள் பெண்கள் ஆளமுடியும் என்பதை தைரியமாக நிரூபித்தாள், சாலைகளை செம்மைபடுத்தினாள், ஆலயங்கள் அவரால் புத்துயிர்பெற்றன‌

எத்தனையோ போர்களை நடத்தினார்

நாயக்க மன்னர்கள் எத்தனையோ பேரிலும் நாயக்க அரசி மங்கம்மாளின் ஆட்சியே சாலசிறந்தது என சொல்கின்றது வரலாறு

இப்படி வாழ்வாங்கு வாழ்ந்த மங்கம்மா என்ன ஆனாள்?

பேரனுக்கும் மங்கம்மாளுக்கும் மோதிற்று, எத்தனையோ மன்னர்களை அடக்கிய மங்கம்மாள் பேரன் மேலான பாசத்தில் தவித்தாள்

நினைத்தால் அவனை நொடிபொழுதில் சரித்திருக்கலாம், ஆனால் பாசம் அவளை தடுத்தது

அந்த சொக்கநாத நாயக்கன், ஆம் தன் கணவனின் பெயரை தன்பேரனுக்கு சூட்டி யாரை வளர்த்தாளோ, யாருக்காக உயிரை பணயம் வைத்து ஆண்டாளோ அவளையே
சிறையில் அடைத்தான் அந்த பேரன்

ஷாஜகானின் கடைசி காலம் போலவே மங்கம்மாளின் கடைசி காலமும் நிம்மதியாக இல்லை..

மதுரை சிறையிலே வாடி மறைந்தாள் அந்த மகாராணி

மங்கம்மாளின் துணிவும் வாழ்வும் ஆட்சியும் மாபெரும் சரித்திரம்

அதை தமிழகம் படித்ததோ இல்லையோ ஆந்திர இயக்குனர் ராஜமவுலி படித்திருந்தார்.

அதில் வரும் அந்த “சிவகாமி தேவி” பாத்திரம் ருத்ரம்மா என்பார்கள்

அல்ல, அவள் கதை வேறு

கைகுழந்தையோடு ஆட்சிக்கு வந்து மிக திறமையாக ஆண்ட அந்த பாத்திரம் சாட்சாத் மங்கம்மாளின் சாயலே

தமிழ் இயக்குநர் செய்ய வேண்டியதை ராஜமவுலி செய்தார்

மங்கம்மாளின் சாயலை ஓரளவு சொன்னபடம் அந்த பாகுபலி, சில சினிமா மசாலாக்கள் உண்டெனினும் ரம்யா கிருஷ்ணனின் பாத்திரம் மங்கம்மாளுடையது

அரச அரியணையினை விட்டுதள்ளி இருப்பது, போர்வியூகம் வகுப்பது, களத்திற்கே செல்வது என , கைகுழந்தையுடன் அரியணையில் அமர்வது என மங்கம்மாளை கண்முன் நிறுத்தினார் ராஜமவுலி

குறிப்பாக ஒரு காலை நேராக மடக்கி, ஒருகாலை குறுக்காக மடக்கி கம்பீரமாக அமரும் அந்த காட்சியில் மங்கம்மா நாச்சியாளை அப்படியே நிறுத்தினார் ராஜமவுலி

அந்த காட்சியினை பார்க்கும்பொழுது மனம் ராஜமவுலிக்கு இனம்புரியா நன்றியினை சொன்னது

பாகுபலி படமே மங்கம்மாளின் கதை அன்றி வேறல்ல‌

அந்த ராஜமவுலி தேடி படித்திருகின்றான், மங்கம்மாளின் அருமையினை உணர்ந்திருக்கின்றான், படத்தில் வென்றிருக்கின்றான்

இங்கே படிக்க யாருண்டு? தமிழக சாபம் அப்படி

இவனுக்கு வரலாறே பெரியார் காலத்தில் தொடங்கி மணியம்மை காலத்தில் வந்து கலைஞர் காலம் வந்து இப்பொழுது முக ஸ்டாலினுடன் நிற்கின்றது

அவனை பொறுத்தவரை தமிழினம் 100 ஆண்டுக்கு முன்புதான் திடீரென பூமிக்கு வந்தது, அவன் அப்படித்தான், அவன் என்ன செய்வான் பாவம்?

அவனை ஆட்டிவைக்கும் அரசியல் அப்படி

(எந்த பெண்ணுரிமை கும்பலுக்காவது, பெண் விடுதலை அழிச்சாட்டியங்களுக்காவது மங்கம்மாளை தெரியுமா என்றால் தெரியாது..

ஏன் என்றால் அவர்கள் அறிவும் அனுபவமும் புரட்சி சிந்தனையும் அவ்வளவுதான், பரிதாபம்)

திருச்சி மாளிகையும், காந்தி மியூசியமும் மங்கம்மாள் சுவாசித்த காற்றின் நினைவுகளையும் அவள் காலடி சுவடுகளையும் தாங்கி நிற்கின்றது

தமுக்கம் மைதானம் அவள் யானைகளை மோதவிட்டு விளையாடிய காட்சிக்கு சான்றாக நிற்கின்றது

மதுரை ஆலயம் அவள் செய்த திருப்பணிகளுக்கு சான்றாய் நிற்கின்றது

மங்கம்மாள் சாலை அவளின் பெரும் சாதனையினை இன்றும் சொல்லி நிற்கின்றது

அவள் உருவாக்கிய சத்திரங்களும், மாட்டு தாவாணியும் இன்னும் எஞ்சியிருக்கின்றன‌

செந்தூர் ஆலயமும் குலசேகரன் பட்டின ஆலயமும் அந்த மகாராணி தன் பக்தர்களுக்காக அமைத்து வைத்த சாலைகாக அவளை நோக்கிகொண்டிருக்கின்றன‌

அந்த உத்தம ராணிக்கு, பெண்குல பேரரசிக்கு இன்று பிறந்தநாள்

தமிழகத்தின் தனிபரும் அரசியின் 370ம் பிறந்த நாளில் அந்த‌
மங்கம்மாளை வணங்குவதில் தமிழகம் பெருமை அடைகின்றது