இதன் பெயர்தான் பெரியாரின் திராவிட புரட்சி

நீ சொல்வது தவறு அன்று தொழிலதிபர்களையும், நிலச்சுவாந்தாரையும் பிராமணன் ஆட்டிவைத்தான் பெரியார் அதை உடைக்கத்தான் பிராமணனை விரட்டினார் உனக்கு புரியாது

அடேய் அன்றே வெள்ளையன் ஆட்சிதானே, வெள்ளையனிடம் பிராமணணை விரட்ட சொல்லி அவர் கேட்க வேண்டியதுதானே ஏன் அவன் அவனிடம் சொல்லவில்லை

அது..ம்ம்.. ஆங் பிராமணனை பகைத்தால் வெள்ளையனால் ஆள முடியாது

ஏண்டா இது ஓவராக இல்லை? பிராமணனா நாட்டை வாள்முனையில் வெள்ளையனுக்கு கொடுத்தான், நாட்டை ஆளத்தான் பிராமணணை வெள்ளையன் வேலைக்கு வைத்திருந்தான், அவனுக்கு ஏதடா அதிகாரம்?

இல்லை இல்லை, பிராமணரே நாட்டை ஆண்டனர்

ஏது இங்கிலாந்து மகாராணியும், சர்ச்சிலும் பிராமணரா?

உமக்கு ஒண்ணுமே தெரியவில்லை

பின் ஏன் வெள்ளையனிடம் விடுதலை கேட்டார்கள்?

அதெல்லாம் பார்மாலிட்டி

சரி சுதந்திரத்திற்கு பின் என்ன இருந்தது?

மக்களாட்சி

மக்களாட்சியில் பெரியார் தொழிலாளருக்கு எத்தனை போராட்டம் நடத்தினார்? தின கூலிகளுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?

ம்ம் அவர் சமூக போராளி

கிழிச்ச போராளி போடா, அதிகாரம் யாரிடம் இருந்ததோ அவரை பெரியார் பகைத்ததே இல்லை, அது வெள்ளையன்,காமராஜர், அண்ணா, கலைஞர் ஆடை என தொடர்ந்தது அப்படியே பணக்காரனையும் பண்ணையாரையும் பெரியார் எதிர்த்ததாக சரித்திரமே இல்லை

இது என்ன புதுசா இருக்கு?

இதுதாண்டா உண்மை, ஊரில் இருக்கும் பணக்க்காரன் தொழிலதிபர் ஆட்சியாளன் என யாரையும் பெரியார் பகைத்ததில்லை, கோவிலில் மணியடித்த அல்லது அரசாங்க கூலியாக இருந்த அப்பாவி பிராமணனே அவர் எதிரி

ஏண்ணே அப்படி?

அந்த பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், வேறு யாரிடமாவது வம்பிழுத்தால் அவன் நொறுக்கிவிடுவான் அல்லவா?

ஆமாம்

இதன் பெயர்தான் பெரியாரின் திராவிட புரட்சி போடா..