வரலாறு அதைத்தான் சொல்கின்றது
வாஞ்சிநாதன் சாதி வெறியன், ஆஷ் துரை தலித்துக்களுக்காக நல்லாட்சி செய்த ஆங்கிலேயன். பிராமணர் எல்லோரும் சாதிவெறி பிடித்தவர்கள் ஆங்கிலேயன் சமத்துவமும் கல்வியும் கொடுத்த உத்தமன் என சிலர் கிளம்பியாயிற்று
அந்த உத்தமன் ஆங்கிலேயன் ஏன் தலித்துக்களை லண்டனில் மொத்தமாக குடியேற்றி வாழவைக்கவில்லை
அட லண்டன் வேண்டாம், அவன் ஆட்சியில் இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா எல்லாம் அழைத்து சென்று “இதோ நீங்கள் கண்ட சமத்துவ தேசம், சாதிவெறி பிடித்த இந்தியா உங்களுக்கு வேண்டாம், இங்கு நீவீர் வாழ்வாங்கு வாழ்க..”” என ஏன் சொல்லவில்லை
தாழ்த்தபட்ட மக்கள் மேல் வெள்ளையனுக்கு பெரும் அபிமானமா? இல்லை
அவன் நினைத்திருந்தால் நொடியில் தலித் உரிமைகளை நிறைவேற்றியிருக்கலாம் , அவர்களுக்கு பூரண உரிமை கொடுத்து வாழ்வாங்கு வாழவைத்திருக்கலாம்
ஆம் அவனிடமே முழு அதிகாரம் குவிந்திருந்தது, ஆனால் செய்தானா? இல்லை
மாறாக இது உட்சமூகத்து பிரச்சினை என அமைதிகாத்து ரசித்தான், இங்கே சமூகம் மோதிவெடித்தது அவன் சிரித்துகொண்டான்
தீர்வு கொடுக்கும் இடத்தில் இருப்பவனை விட்டுவிட்டு மொத்த அடிமை சமூகம் இங்கு தனக்குள் மோதிகொண்டது என்பது வரலாற்று மடமை
இங்கு குழப்பம் ஏற்படுத்தினால் மக்கள் அவர்களுக்குள் மோதினால் அது தன் ஆட்சிக்கு சிக்கல் இல்லை என கருதினான்
அட்டகாசமாக அதை செய்தான்
ஆட்சியினை அதிகாரத்தை தன் வசம் வைத்து கொண்டு, தாழ்த்தபட்ட மக்களை உயர்சாதி நோக்கி கத்த வைத்த தந்திரம் அவனுக்கு இருந்தது
இந்த மக்களும் தங்கள் நாட்டு உயர்சாதிகாரனை திட்டிகொண்டிருந்தார்களே தவிர, உண்மையான ஆதிக்கத்தை செலுத்திய வெள்ளையனை விட்டுவிட்டார்கள்
வெள்ளையன் அல்லவா ஆதிக்க சாதி, அதை எல்லா குபீர் போராளிகளும் மிக அழகாக மறைத்தனர், காரணம் ஆதிக்க சாதி என வெள்ளையனை சொன்னால் தூக்கி போட்டு மிதித்திருப்பான் , பின் புரட்சி போராட்டம் என்னாவது?
வெள்ளையன் ஆட்சியில் பல திடீர் குபிர் புரட்சியாளர்கள், அரை குறை சாதி சமத்துவ போராளிகள் எல்லாம் உருவானது இப்படித்தான்
அது அவனுக்கு அனுகூலமாயிருந்தது, இன்று காணும் எல்லா போராளி இம்சைகளின் வித்து அவன் காலத்தில்தான் விதைக்கபட்டது, அது இன்று வளர்ந்திருக்கின்றது
அவ்வளவுதான் விஷயம், மாறாக வெள்ளையன் நல்லவன் என்பதோ ஆஷ்துரை சமூகத்தை காக்க வந்த போராளி என்பதெல்லாம் அரைவேக்காட்டுதனம்..
வாஞ்சிநாதன் இல்லாவிட்டால் கூட இன்னொரு வ.உ.சி பக்தன் அவனை கொன்றிருப்பான்.
//வெள்ளையன் காலத்துக்கு முன்பே இங்கு சாதி ஒழிப்பு போராளிகள் உண்டு
இந்த பசுவைய்யா, அய்யா வைகுண்டர், கல்கத்தாவின் சிந்தனையாளர்கள் என ஏகபட்ட சிந்தனையாளர்களும் போராளிகளும் இருந்தனர்
ஆனால் அவர்கள் எல்லாம் இங்கு சிந்திக்க சொன்னார்களே தவிர, மதமாற்றமோ கடவுள் இல்லை என அழிச்சாட்டியமோ செய்யவில்லை
வெள்ளையனே மதமாற்றம், கடவுள் இல்லை என விஷங்களை தடவி சாதி ஒழிப்பு என ஊக்கபடுத்தினான்
வரலாறு அதைத்தான் சொல்கின்றது, அவன் காலத்து போராளிகள் பூராபயலும் அவனின் கைகூலிகளே, வரலாறு அப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது.//