கரகாட்டகாரன் படம் வந்து 30 ஆண்டு ஆகிவிட்டது
கரகாட்டகாரன் படம் வந்து 30 ஆண்டு ஆகிவிட்டது என சில ரகளைகள்
நாயகன் ராமராஜனுக்கே அது மறந்திருக்கலாம் எனினும் அன்றைய காலத்தில் அது மெகா ஹிட் திரைப்படம்
நிச்சயம் கரகாட்டகாரன் படம் அந்த தில்லானா மோகனம்பாள் படத்தின் அப்பட்டமான காப்பி
6 வித்தியாசம் கூட கண்டுபிடிக்கமுடியா அளவு அப்படியே எடுத்திருந்தார்கள்
ஒரே ஒரு வித்தியாசம் அந்த சிவாஜி ஆடமாட்டார், இங்கு ராமராஜன் ஆடுவதாக நடிப்பார்
மற்றபடி அந்த நாகேஷ் பாத்திரம் சந்திரசேகராகவும், பாலையா பாத்திரம் அப்படியே கவுண்டமணியாகவும் வந்தது, தவிலில் கூட ஒற்றுமை
மற்றபடி கேவி மகாதேவனின் இசையினை இளையராஜா இசை மாற்றீடு செய்தது, படம் அதில்தான் நின்றது
ஒருமாதிரியான படங்கள் வந்துகொண்டிருந்த 1985களில் அந்த கரகாட்டகாரன் படம் அலுப்புதட்டாமல் பார்க்க வைத்தது என்பது இயக்குநரின் சாதனை
காப்பி என்றாலும் அதை நன்றாக கிராம சூழலுக்கு அவர்களால் கொடுக்க முடிந்திருந்தது
மற்றபடி படத்தை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, ராமராஜன் இளையராஜா கங்கை அமரன் என எல்லோருக்கும் அன்று நல்ல நேரம் இருந்ததால் எல்லாம் கைகூடிற்று
பின்பு அதே தில்லானா மோகனப்பாள் கதையினை “சங்கமம்” என எடுக்க தெரியாமல் எடுத்தார்கள்
ஆம் காப்பி அடிப்பதிலும் கவனம் வேண்டும், சினிமாவினை காப்பி அடிப்பது என்பது பரீட்சையில் காப்பி அடிப்பது போன்றது அல்ல
சிலையினை பார்த்து இன்னொரு சிலையினை செதுக்குவது போன்று மிக கவனமானது, கொஞ்சம் சறுக்கினாலும் முடிந்தது விஷயம்
பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தினை அப்படித்தான் சந்தாணம் கோஷ்டி சிதைத்தது
எமக்கு தெரிந்து ஒரு பழைய படத்தை இப்பொழுது அதன் சாயலில் எடுக்கலாம் , ஆனால் இதுவரை யாரும் அதை முயற்சிக்கவில்லை
ஏன்?
அந்த ரத்த கண்ணீர் அப்படியானது, மிகசிறந்த கதை அது
ஆனால் நடிப்பு அரக்கனான எம்.ஆர் ராதா தவிர இன்னொரு நடிகன் அதற்கு பொருந்தமாட்டான், அவரை தவிர யாரையும் அந்த பாத்திரத்துக்கு பொருத்த முடியாது
அதனால் அந்த மகா நடிகன் மறுபடி பிறந்து வரும்வரை அந்த படம் அப்படியே இருக்கட்டும்