இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

தந்தையர் நாள் என உலகம் கொண்டாடிய நேரம் இப்படியும் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது

இதெல்லாம் தமிழ்நாட்டு கலாச்சாரங்களில் ஒன்று.

அவரும் கொஞ்சம் விவஸ்தை கெட்ட தகப்பனாக இருந்திருப்பார் போல, மொய்கணக்கை கேட்க இதுவா நேரம்?

அப்பொழுது போய் மொய் கணக்கு, மய் கணக்கு என்றால் சவத்து மூதிய தூக்கி போட்டு மிதிக்கமாட்டானா?

இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

அதாவது திருமணம் முடித்துவிட்டு முதலிரவு வைப்பதை விட, முதலிரவினை வைத்துவிட்டு தாலிகட்டினால் வரதட்சனை கொடுமையே இல்லை என்றாகிவிடும் போல..

“மகனே இன்னும் வரதட்சனை வரவில்லை, உள்ளே செல்லாதே..” என பெற்றோர் தடுத்தால் எந்த மகனும் அவர்கள் மண்டையினை பிளந்துவிட மாட்டானா?

அணையில் சீறும் வெள்ளத்தில் மின்சாரம் தயாரிப்பது போல, “சில வகை” வேகங்களை சமூக நீதிக்காக பயன்படுத்துவது ஒன்றும் தவறல்ல..