விரைவில் தொடங்கிய இடத்திலே வந்து நிற்பார்கள்
மதிமுகவினர் ஸ்டாலின் முதல்வராக ரகசியமாக பாடுபடும் நிலையில், தும்பிகள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தல் அணுகழிவுக்கு மாற்று என பிசியாக இருக்கும் நேரத்தில் மிகபெரும் தமிழின விரோதம் நடந்திருக்கின்றது
ஆம் இலங்கை ராணுவத்தினர் 200 பேர் இந்தியா வந்திருக்கின்றனர், மிக உல்லாசமாக சுற்றிகொண்டிருக்கின்றனர்
எந்த ராணுவம்?
இலங்கையில் தமிழரை கொன்றுவிட்டு இன்னும் தமிழர் நிலங்களிலே நிலைபெற்றிருக்கும் அந்த ராணுவம்
இதை எப்படி தும்பிகள் மறந்தார்கள் என தெரியவில்லை அல்லது செய்தி தெரியாதா என தெரியவில்லை.
ஆனால் தும்பிகள் இப்பொழுதெல்லாம் திசைமாறிவிட்டனர்
முதலில் இனவிடுதலை, தமிழீழம் என ஓட தொடங்கிய தும்பிகள் இப்பொழுது எதை நோக்கி ஓடுகின்றார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை
நேராக ஓடினால் எங்காவது போய் நிற்பார்கள் அல்லது பள்ளத்தில் விழுந்தாவது கிடப்பார்கள்
இவர்கள் ஓடுவது ஒரு வட்டம் என்பதால் விரைவில் தொடங்கிய இடத்திலே வந்து நிற்பார்கள்
அதற்குள் சரத்பொன்சேகாவே தமிழ்நாட்டில் வந்து ஆட்டுக்கால் சூப் குடித்துவிட்டு சென்றுவிடுவார்
