நாங்கள் வங்க புலி

வங்கதேசம் சுதந்திரம் அடைந்தபொழுது கூட அவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்பது தெரியாது

நேற்று வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கியதில் இருந்து ஒரு மாதிரி திரிகின்றார்கள்.

யாரை பார்த்தாலும் ஒரு வெற்றி சிரிப்புடனே சுற்றி சுற்றி வருகின்றார்கள், பெரும் ஆராளித்தனம்

“அடேய் வெஸ்ட் இண்டீஸ் என்பது எங்கள் நாட்டு காங்கிரஸ் போல பழைய தாதா, இப்பொழுது அது பல்பிடுங்கபட்ட பாம்பு, பல்லும் நகமும் இல்லா கிழட்டு புலி..” என்றாலும் கேட்பதில்லை

யார் வந்தாலும் அடிப்போம் என ஒரே சத்தம்

எப்படியும் ஒழியுங்கள் என விட்டுவிடலாம் ஆனால் நம்மிடமே வந்து “அடுத்த அடி இந்தியாவுக்கு” என்றால் விடமுடியுமா?

ரட்சகன் நாகார்ஜூனாக நரம்பு புடைத்துவிட்டது, சொல்லியாயிற்று

“ஆமாடா எங்களுக்கும் அடுத்தால நீங்கதான், உங்க பங்காளிக்கு முதுகில் கொடுத்தபின் உங்களுக்கு கொடுக்காமல் எப்படி?”

“நாங்கள் கிறிஸ் கெய்லையே விரட்டிவிட்டோம்” என்றான்

“நாங்கள் அவனை ஒரு ஆட்டக்காரனாகவே நினைப்பதில்லை..” என்றோம்

“நாங்கள் வங்க புலி , பாய்ந்தால் உங்களை சிதைத்துவிடுவோம்” என்றான்

“எங்கள் விஜய் சங்கரே புலியின் வாலை பிடித்து அடித்து கொன்றுவிடுவான் ஜாக்கிரதை” என்றோம்

“நாங்கள் யாரென காட்டுவோம்.” என சொல்லிவிட்டு ஓடிவிட்டான்

“நாங்கள் யாரென உங்களை அடித்து காட்ட வேண்டிய அவசியமில்லை, வேண்டுமானால் வலிக்காமல் அடிப்போம் அப்படியே ஓடிவிடுங்கள்..” என்றாயிற்று

ரட்சகன் ரோகித் சர்மாவும், கோலி பகவானும் நம்மை காப்பாற்றட்டும்..