ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் போராட்டம் சூடுபிடித்து 20 லட்சம் மக்கள் களத்தில் இருக்கின்றனர், உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது

இப்போது ஹாங்காங் சீனாவின் பகுதி என்றாலும் அது தன்னாட்சி பகுதி

அங்கு அரசு ஒரு சட்டத்திருத்தம் செய்கின்றது அது என்னவென்றால் ஹாங்காங் வாசிகள் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் அவர்கள் எந்த நாட்டில் குற்றம் புரிந்தார்களோ அந்த நாட்டு சட்டபடி தண்டிக்கபட ஒப்புவிக்கபடுவார்கள்.

இதுதான் ஹாங்காங் வாசிகளின் கோபத்துக்கு காரணம், இச்சட்டம் தங்களை கைவிடுவதாகவும், இனி வெளிநாடுகளில் வரி விவகாரம் கூட தங்களை அந்நாட்டு சிறையில் தள்ளிவிடும் என கொதிக்கின்றார்கள்..

விஷயம் இல்லாமலும் இல்லை, ஹாங்காங் என்பது வியாபார உலகம் எல்லா நாட்டிலும் அதன் சங்கிலி உண்டு

ஹவாலா முதல் ஏகபட்ட சமாச்சாரங்களின் சொர்க்க பூமி அது

இதனால் மக்கள் கொதிக்கின்றனர், விஷயம் பெரிதாகின்றது, 20 லட்சம் பேர் வீதிக்கு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் உலகமும் உற்று கவனிக்கின்றது