அதை தடுப்பது நிச்சயம் சரியல்ல

கேரளா 20 லட்சம் லிட்டர் நீரை சென்னைக்கு அனுப்புவதாக கேட்டுகொண்டதை பழனிச்சாமி அரசு வேண்டாம் என சொல்லிவிட்டது

இதுபற்றி கேட்டால் இப்பொழுது வாங்கினால் முல்லைபெரியாறில் கேரளா நீர் கொடுக்காதாம்

இதைவிட அறிவுகெட்ட தனம் இருக்க முடியாது

இது ஒரேநாடு, ஒரு நாட்டின் ஒரு நகரத்துக்கு தட்டுபாடு என்றால் இன்னொரு நகரத்தில் இருந்து கொண்டு செல்லலாம்

இதில் என்ன அரசியல் கண்டார்களோ தெரியவில்லை

ஏதோ முல்லைபெரியாற்றில் இருந்து ரயில்வருவது போல பில்டப்

இப்பொழுது ஆந்திர அரசிடம் 2 டிம்சி தண்ணீருக்காக தமிழக அரசு பேசிகொண்டிருக்கின்றது

இரண்டு டிஎம்சி நீரின் விலை 20 கோடிரூபாயாம்

இந்த லட்சணத்தில் கேரள ரயினை விரட்டிவிட்டோம் தன்மானம், தீர்க்கதரிசனம் என்பதெல்லாம் புலம்பல்

கேரளா வெள்ளத்தில் தத்தளித்தபொழுது நாம் உணவு அனுப்பினோம்

இப்பொழுது நமக்கு சிரமம் என்றால் அவர்கள் உதவ முற்படுகின்றார்கள்

இதில் என்ன அரசியல் மண்ணாங்கட்டி?

கேரளாவில் இருந்து பத்மினி வரலாம், பாசில் வரலாம் , நயனும் நித்யாமேனனும் வரலாம்

ஏன் எம்ஜி ராம்சந்திரனே வரலாம்

ஆனால் நீரோடு ரயில்மட்டும் வரகூடாதாம். 20 லட்சம் லிட்டர் நீர் யாரோ சென்னை
ஏழைகளுக்கு பயனளிக்கத்தான் செய்யும்

அதை தடுப்பது நிச்சயம் சரியல்ல.