தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது
வட இந்தியன் இங்கே வந்து குவிந்துவிட்டானாம், அதனால் ஒரே ரேஷன் கார்டு என்பது இங்கு சிக்கலாகிவிடுமாம். அவனுக்கும் சென்றுவிடுமாம்
பெருந்தன்மைக்கு பெயர் போன தமிழினம் சொல்லும் மிக மட்டமான காரணம் இது
மும்பையில் ஏகபட்ட தமிழர் உண்டு, மராட்டிய அரசின் நியாயவிலை கடைகளை கூட அவர்கள் எடுத்து நடத்திய காலங்கள் உண்டு
தமிழன் இந்தியா எங்கும் செல்லலாம், எல்லா மாநிலத்திலும் வாழலாம் சம்பாதிக்கலாம்
பீகாரிலும் ஒரிசாவிலும் பல்கலை கழகமே நடத்தலாம், சிவ் நாடார் போன்றவர்கள் பெரும் கணிணி சாம்ராஜ்யமே டெல்லியில் நடத்தலாம்
ஆனால் வடநாட்டவன் இங்கு வந்து நம்மோடு உண்டால் இவர்களுக்கு பொறுக்காது
எழுதி வைத்து கொள்ளுங்கள்
ஈழதமிழினம் என்ன பாடுபட்டதோ அந்த நிலைக்கு இங்குள்ள தமிழரையும் அழைத்து செல்ல ஒரு கோஷ்டி திட்டமிட்டு வேலை செய்கின்றது
விரைவில் அது நடக்கலாம், ஈழ சிக்கலின் ஆரம்பம் இப்படி முணுமுணுப்பில்தான் தொடங்கியது
பின் பெரும் ரத்த களறியில் முடிந்து இன்று பேரழிவில் சிக்கி, ஓரளவு அனுசரித்து போயிருந்தால் வாழ்ந்திருக்கலாமோ? இப்பொழுது என்ன கிழித்துவிட்டோம் என அந்த இனம் தவிக்கின்றது
முழுக்க அழிந்தபின் அவர்களுக்கு ஞானம் வந்திருக்கின்றது
தமிழகம் அதே ஈழ அழிவுக்கு தயாராகின்றது, நடக்கும் காட்சிகள் அதைத்தான் சொல்கின்றது
அதனை தவிர்ப்பது தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது