அன்று கற்றவர்கள் இருந்த அவை
இந்த வைகோ பாராளுமன்றம் சென்றால் கிழித்தெறிந்துவிடுவார், பைபிளில் வரும் சாம்சன் போல மாளிகையின் தூணை எல்லாம் பிடுங்கிவிடுவார் என ஏகபட்ட ஒப்பாரிகள்
உண்மையில் வைகோ அங்கு சென்றால் என்ன செய்வார்? ஓரு புல்லும் புடுங்கமாட்டார்.
இந்திராவின் காலத்தில் வைகோ பேசினார் என்றால் அவரை பேசவிட இந்திராவுக்கு அவசியம் இருந்தது. ஈழவிவகாரத்தினை பாராளுமன்றத்தில் பேசுகின்றோம் என இலங்கைக்கு கண்சிமிட்டும் அவசியம் இருந்தது, அதற்கு மேல் திமுகவினை உடைக்கும் அரசியலும் இருந்தது
ஏகபட்ட திட்டங்களுடனே வைகோ பேசவைக்கபட்டார், காலம் அப்படி இருந்தது
எல்லாவற்றுக்கும் மேல் அன்று கற்றவர்கள் இருந்த அவை வைகோவின் பேச்சினை ரசிக்கவும் செய்தது
இன்று அங்கு இருப்பது எல்லாம் ஒருமாதிரி கோஷ்டிகள், வைகோ பேசினாலும் அவர்களுக்கு புரியாது, அவர் பேசி ஆகபோவது ஒன்றுமே இல்லை
கிரிக்கெட்டில் பந்து எல்லை கோட்டை தொட்டுவிடும் என தெரிந்தும் சில பீல்டர்கள் விழுந்து கிடப்பார்கள்
அப்படி ஒன்றுமே செய்யமுடியாது என தெரிந்தும் டெல்லியில் சம்பிரதாயத்துக்கு கத்தி கொண்டிருக்கின்றனர் அக்கோஷ்டிகள், அதில் வைகோ என்பவரும் சேரபோகின்றார், என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை