இதெல்லாம் திராவிட நியாயங்களாம்
இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொங்குபவர்கள் யாரென்றால் திக, திமுக, திருமா இன்னபிற
இங்கே இட ஒதுக்கீடு வேண்டுமாம், தாழ கிடப்பவர்கள் மேலே வர வேண்டுமாம்
இதைத்தான் இலங்கையில் இலங்கை அரசும் சொன்னது, ஈழதமிழர் கல்வியில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெரும்பான்மை சிங்கள சமூகம் தாழகிடக்கின்றது, அவர்கள் மேல் எழும்ப இட ஒதுக்கீடு அவசியம்
அதை சொன்னவன் தர்மபாலா, சிங்களருக்கு அவன் தெய்வம் தமிழகத்தில் அவன் இனவெறியன்
ஆனால் இங்கு அதே இட ஒதுக்கீட்டை சொன்ன பெரியார் புரட்சியாளன்
இங்கே பிராமண சமூகம் கல்வியில் அரசுவேலையில் ஆதிக்கம் செலுத்தியது போலத்தான் அங்கு ஈழதமிழரும் இருந்தனர், அதே சாயல்
இங்கே தாழ்த்தபட்ட இனங்கள் போலத்தான் பெரும்பான்மை சிங்கள சமூகம் அங்கு ஒடுங்கி கிடந்தது
இங்கே இட ஒதுக்கீடு செய்தால் எல்லோரும் ஏற்க வேண்டும், ஆனால் இலங்கையில் செய்தால் ஏற்க கூடாது துப்பாக்கி தூக்க வெண்டும், பெரும் அழிவுகளை ஏற்படுத்த வேண்டும், ஒப்பாரி வைக்க வேண்டும்
ஆக தாழகிடப்பவருக்கு இலங்கை அரசு ஏதும் செய்தால் அதன் பெயர் இனவாதம், தமிழர் ஒழிப்பு
ஆனால் இந்திய அரசு செய்தால் அதன் பெயர் இட ஒதுக்கீடு
இதெல்லாம் திராவிட நியாயங்களாம்