மிக அற்புத கவிஞர் வைரமுத்து
கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும்
எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம்
ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர்
இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் உங்கள் முடிவினை பொறுத்தது
1977களில் பொன்மாலை பொழுது என வந்த வைரமுத்து எட்டியிருக்கும் உயரம் கொஞ்சமல்ல
சில சர்ச்சைகளை சொல்வ்வார்கள், கவிஞர்கள் வாங்கி வந்த சாபம் அப்படி. அவர்கள் அப்படித்தான்
கம்பனின் தனிப்பாடல் திரட்டு அவனின் பெண் மோகத்தை சொல்கின்றது
பாட்டுகொரு பாரதி கஞ்சாவில் குடியிருந்திருக்கின்றான்
கண்ணதாசன் மதுவும் மங்கையுமாகவே வாழ்ந்தவர் அதை ஒப்பும் கொண்டவர்
எல்லா கவிஞர்களின் வாழ்வும் அப்படித்தான் இருந்திருக்கின்றது, அந்த சாபத்துக்கு வைரமுத்து மட்டும் தப்ப முடியுமா?
மங்கையோ மதுவோ போதையோ அந்த சபிக்கபட்ட வாழ்வின் அங்கமாகிவி
டுகின்றது, ஏதாவது ஒன்று இல்லாத
கவிஞர்கள் கிடையாது
கண்ணதாசன் வாலிக்கு பின் தமிழகம் கண்ட அற்புத கவிஞன் வைரமுத்து
அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது
அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் உதவி செய்திருக்கின்றார், மறக்க முடியாத உதவி
குஷ்பூவிற்கு மிக பொருத்தமான பாடல்களை வைரமுத்து எழுதினார்
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..” என அவர் குஷ்பூவிற்கு எழுதியபாடல் ரசனையின் உச்சம், மிகபெரும் குஷ்பூ ரசிகனாக இல்லாவிட்டால் அப்பாடல் சாத்தியமே இல்லை
“சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா” என்ற வரிகளாகட்டும், முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா” என்ற வரிகளாகட்டும், குஷ்பூவிற்காய் எழுதபட்டது
இந்த வரிகளுக்காகவே வைரமுத்துவிற்கு வைரமாலை சாற்றலாம்.
கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.
நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக முடியாத, அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து
அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம், இப்பாடலை எழுதியற்காகவே இன்னொரு முறை தேசிய விருது கொடுக்கபட வேண்டிய கவிஞர் அவர்
அதனால் ஸ்பெஷல் வாழ்த்து
அந்த அற்புத கவிஞனுக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இன்னொருமுறை அவர் குஷ்பூவிற்கு இன்னொரு அழியாபாடல் இயற்ற வாழ்த்துவோம்
இப்பொழுதும் அவரின் பாடல்களை, வரிகளை கூர்ந்து கேட்கின்றோம்
ஆம் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் பாடலாகட்டும், ராவணா படத்தின் பாடல்களாகட்டும்
நிச்சயம் இளையராஜாவோடு இணைந்தால் அது இன்னும் பிரகாசித்திருக்கும்
வைரமுத்துவின் பாடல் சிங்கத்து பால் அதை இளையராஜாவின் இசை எனும் தங்க தட்டில்தான் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் கெட்டுவிடும்
இன்னும் காலமிருக்கின்றது
இருவரும் இணையட்டும் மறுபடியும் பூங்காற்று திரும்புமா பாடல் வரட்டும்
தமிழகம் கண்ட தனிபெரும் கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் சங்கம் பெருமை அடைகின்றது
அதுவும் நேற்று அவர் வெளியிட்ட தமிழறாற்றுபடை புத்தகததின் செய்திகளோடு அவரை வாழ்த்துகின்றது
இன்னும் ஆயிரம் ஆயிரம் புத்தகமும் கவிதையும் பாடலும் எழுத வாழ்த்துக்கள்
உங்களை விட்டால் இப்போதைக்கு யார் எங்களுக்கு இருக்கின்றார்கள் எம் அன்புகுரிய தமிழ்கவிஞரே?