கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்

தமிழ்நாடு முழுக்க சுற்றிபார்த்தாலும் தாமிரபரணி தவிர எந்த ஆறிலும் நீர் ஓடுவதாக தெரியவில்லை, நீர்தான் இல்லை மணலாவது இருக்கவேண்டாமா?

அதையும் நன்றாக சுரண்டியிருக்கின்றார்கள்

60 வருடங்களில் தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டிருக்கின்றது, நீரை சேமிக்க ஒரு நடவடிக்கையுமில்லை

100 நாள் வேலைதிட்டத்தை பார்த்தால் குளத்தின் வரப்பினை வெட்டி அதன் மேலேயே போடுகின்றார்கள், நல்லவேளையாக 10 நிமிடம் மட்டும் அவர்கள் வேலை செய்வதால் குளங்கள் இன்னும் முற்றிலும் அழியவில்லை

நீர் மேலான்மை துளியும் இல்லை, நீங்களே உங்களுக்கான நீர் தேவையினை பூர்த்திசெய்யுங்கள் என கைகளை மறைமுகமாக விரித்துவிட்டது தமிழக அரசு

வாக்குக்கு பணம் வாங்கிய மக்களும் தங்களை அறியாமல் அதை சுமக்க தொடங்கிவிட்டனர்

விளைவு நிலத்தடி நீர் பல வகைகளில் வகை தொகை இல்லாமல் சுரண்டபட்டு 500 அடிக்கு கீழே சென்றாலும் இல்லை

உலகிலே நிலத்தடி நீரை மட்டும் நம்பி இயங்கும் மிக மோசமான பகுதியாக தமிழகம் மாறிவிட்டது

நிச்சயம் அது நீண்டகாலம் வராது, இன்னும் மகா மோசமான நிலையினை வருங்காலங்களில் தமிழகம் எட்டும்

மாபெரும் திட்டங்களும் மிக பெரும் அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கபடாவிட்டால் இன்று ஜோலார் பேட்டையிலிருந்து வரும் ரயில் போல எங்கிருந்தோ நீர் கொண்டு வரும் கப்பலுக்காக கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்