Today’s News 14/07/2019

மத்திய அரசு அனுமதி நியூட்ரினோ திட்டத்தை மதிமுக கடுமையாக எதிர்க்கும் – வைகோ

என்னது மதிமுக கட்சியா? அது இன்னமும் இருக்கின்றதா என்ன?

எந்த விஜயலட்சுமி?

தமிழ்பெண் என்பதான் கன்னட திரை கும்பல் என்னை கொடுமைபடுத்துகின்றது , தமிழ்திரையுலகம் என்னை மீட்க வேண்டும் : நடிகை விஜயலட்சுமி கதறல்

எந்த விஜயலட்சுமி?

அங்கிள் சைமனுக்கு கேக் ஊட்டி, பின் சைமன் எதை எல்லாமோ ஊட்டிய அந்த விஜயலட்சுமி

அம்மணி, நான் தமிழச்சி தமிழச்சி என கதறுகின்றது, தமிழச்சிக்கு ஒரு ஆபத்து என்றால் “நாம் தமிழர்” படை சும்மா இருக்குமா?

ஆனால் அங்கிள் மேல் பிராது கொடுத்தவர் தமிழச்சியாக இருந்தால் என்ன? தங்கச்சியாக இருந்தால் என்ன? எப்படி காக்க முடியும்? என சைமனின் தும்பிபடை அமைதி காக்கின்றது

ஒரு லாரி தண்ணீரின் விலை 4500 ரூபாயாக :உயர்ந்தது : செய்தி

இனி ஒரு பயல் விவசாயம் செய்வான்?

அரும்பாடுபட்டு கடன்பட்டு பயிர்களை விளையவைத்து நஷ்டமடைவதை விட‌ நீரை விற்பது எவ்வளவு லாபகரமானது.

விவசாயிகள் வாழ ஒரு அரசு இதை விட என்ன திட்டம் கொண்டுவந்துவிட முடியும்?

உலக விவசாயிகளுக்கே முன்னோடி திட்டம் இது.

அவர் திறந்த கிட்டதட்ட 10 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டு இரு நாட்களில் அந்த காமராஜருக்கு கல்வி கண் திறந்த மகான் என விழா எடுக்க தயாராகின்றது தமிழகம்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ராமசந்திரன் பெயரை சூட்டி சிக்கலை தொடங்கினார்கள், அது தேவையற்ற ஒன்று

விவகாரம் இப்பொழுது ஈரோட்டு நிலையத்துக்கு பெரியார் பெயரை சூட்டவேண்டும் என கனிமொழியால் தொடரபடுகின்றது

இன்னும் பல கோரிக்கைகள் விரைவில் வரலாம்

இதில் முந்திகொள்ள வேண்டாமா?

இதனால் திருச்சி ரயில் நிலையத்திற்கு தங்க‌ தலைவி குஷ்பு பெயரை சூட்டும்படி சங்கம் கோரிக்கை வைக்கின்றது

பாண்டிசேரியில் நடக்கும் அதிகார போட்டியினை கண்டால் மறுபடியும் பிரெஞ்ச்காரனே வந்து நாராயணசாமியினையும் கிரண் பேடியினையும் விரட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்தாலும் அமர்ந்துவிடுவான் போலிருக்கின்றது..

மாட்டுகறி எல்லாம் ஏன் சர்ச்சையாகின்றது என்றால் சுவையான கறி கிடைக்காத காராணமன்றி வேறல்ல‌

மான் கறியினை போல சுவையான கறி இல்லை, அர்ஜூனா கறிகளில் நான் மான் கறி என அர்ஜூனன் காதில் ரகசியமாக பகவான் கண்ணன் சொல்லியிருக்கின்றான்

மான்கறி, மிளா கறி தடையினை விலக்கினால் யார் மாட்டுகறி பக்கம் போக போகின்றார்கள்?

ஆக மான்கறியினை அனுமதிப்பதே மாட்டு கறி சர்ச்சைக்கு முடிவே அன்றி வேறல்ல..

கேப்டனே நேரில் சென்று செய்தி எழுதி கொடுப்பார் போலிருக்கின்றது

எல்லா செய்தியிலும் அவர் பெயர் அத்தி வரதர் என்றால், விஜயகாந்தின் கேப்டன் டிவியில் மட்டும் அவர் பெயர் “அத்திர வரதர்”