எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்
ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 வாங்கினாலோ இல்லை வேறு நவீன சிஸ்டம் வாங்கினாலோ பொருளாதார தடை வீசபடும் என மிரட்டிகொன்டிருந்தது அமெரிக்கா
அவர்களின் அலாவுதீன் பூதமான மைக் பாம்பியோ கூட இந்தியா வந்து அதுபற்றி மிரட்டிவிட்டுத்தான் சென்றார் என்கின்றன செய்திகள்
இப்படியான நிலையில் டிரம்பின் வலது கன்னத்தில் இந்தியாவும் இடது கன்னத்தில் புட்டீனும் மாறி மாறி அடித்துவிட்டார்கள்
எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்.
“பொருளாதார தடை என்பது என்ன? சில நுட்பங்களை அல்லது பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் செய்வது
சரி சிறு நஷ்டம்தான் நிச்சயமாக, ஆனால் இந்த நஷ்டத்தை செய்த அமெரிக்காவினை திருப்பி அடிக்க வேண்டாமா?
எப்படி அடிக்கலாம்? போர் முடியாது அவர்கள் மேல் பொருளாதார தடை முடியாது ,நிறைய முடியாது அவர்கள் சக்தி அப்படி
ஆனால் அவர்கள் என்ன வேற்று கிரகத்திலா இருகின்றார்கள்? அவர்களுக்கான வருமானம் இந்த பூமியின் இதர நாடுகளிலிருந்துதான் வருகின்றது, குறிப்பாக அமெரிக்க டாலர்
சர்வதேச வணிகபடி இரு நாடுகள் வியாபாரத்தை செய்யும்பொழுது டாலரில்தான் பெரும்பாலும் செய்யும்
ஒரு டாலர் பரிமாற்றபடும்பொழுதே குறிப்பிட்ட வருமானம் அமெரிக்காவுக்கு செல்லும், பல மில்லியன் பில்லியன் டாலர் எனும்பொழுது எவ்வளவு செல்லும்?
ஆக நாம் (இந்தியாவும் ரஷ்யாவும்) பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலரில் பரிவர்த்தனை செய்யும் பொழுது ஏன் டாலரில் செய்து அமெரிக்காவுக்கு வருமானம் கொடுக்க வேண்டும்?
நிச்சயம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதம் வாங்க போவது உறுதி, அதை தொடர்ந்து அவர்கள் பொருளாதார தடை வீசலாம்
நம்மை ஒருவன் அடிக்கும் பொழுது , அவனின் டாலர் மட்டும் நமக்கு எதற்கு?
வேண்டவே வேண்டாம், ஏ இந்தியாவே நீ எஸ் 400க்கு பணத்தை ரூபாயாக கொடு, நான் எனக்கு தேவையானதை வாங்கும்பொழுது ரூபிளாக தருகின்றேன்
உன் நாட்டிலும் என் நாட்டிலும் அதனால் வருமானம் வரும், அவர்களுக்கு எதற்கு வீணாக கொடுக்க வேண்டும்?”
இப்படி திட்டமிட்டு விட்டு அதை உறக்க சொல்லியும் விட்டார்கள்.
இப்படி இதற்கு முன் இந்தியா தைரியமாக சொன்னதா என்றால் ராஜிவ் காலத்தில் சொன்னது
ராஜிவுக்கு முன்பே 1978ல் இப்படி ஒரு ஒப்பந்தம் உண்டு ஆனால் அது பரணில் இருந்தது, ராஜிவ் அதை சீர்படுத்தி செயல்படுத்த முனைந்தார்
ராஜிவ் காந்தியும் கோர்ப்பசேவும் இதுபற்றி பேசதொடங்கிய பொழுதுதான் சோவியத் உடைந்தது, பின் ராஜிவும் கொல்லபட்டார்
இன்று அங்கு வலுவான புட்டீனும், இங்கு இரும்பு மனிதனாக தனிபெரும் தலைவனாக மோடியும் வந்துவிட்டார்
வலுவான தலைவர்கள் அமையும் பொழுது என்ன நடக்குமோ அந்த தைரியமான விஷயங்கள் மறுபடி நடக்கின்றன
இந்திய நிதியமைச்சும் இதற்கு பெரும் வலுசேர்த்தது என்கின்றார்கள்
உலக அரங்கில் மோடி சிங்கமென நிற்கின்றார், அமெரிக்கா ஒரு மாதிரி முறைத்தாலும் அவர் கண்டுகொள்ளவில்லை நாட்டுக்க்கு தேவையானதை செய்கின்றார், வாழ்த்துக்கள்
நாட்டு நலனுக்காக மாபெரும் நல்ல முடிவுகளை தைரியமாக எடுக்கும் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் வாழ்த்துக்கள்

