அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன
வளைகுடா நிலமைகள் அவ்வளவு நன்றாக இல்லை, லைபீரியா கப்பலை ஈரான் விடுவித்தாலும் பிரிட்டன் கப்பலை விடுவதாக இல்லை
பிரிட்டன் தன் 3ம் போர்கப்பலை அனுப்பியிருக்கின்றது, அது பெரும் விமானம்தாங்கி கப்பல் அல்ல, நாசகாரி கப்பல்
பெரும் கப்பல்கள் வந்தால் பிரிட்டன் படைகுவிப்பு என்ற பெயர் வந்துவிடு என்பதால் பிரிட்டன் மிக எச்சரிக்கையாக இது ஈரானுக்கு எதிராக அல்ல என திரும்ப திரும்ப சொல்கின்றது
பின்பு ஏன் 3ம் கப்பல் வருகின்றது? பேரீட்சம் பழம் சுமக்கவா என கேட்டால் பிரிட்டனிடமிருந்து பதில் இல்லை
இந்நிலையில் இன்று பிரிட்டன் அறிவித்துள்ள அறிவிப்பு பலத்த சலசலப்பினை ஏற்படுத்தியிருகின்றது
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவுக்கான தன் விமான சேவையினை 1 வாரத்துக்கு “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” ரத்து செய்திருக்கின்றது.
மிக வலுவான உளவு தகவல் கிடைக்காமல் இது சாத்தியமில்லை
ஆக ஈரனால் பிரிட்டன் விமானங்களுக்கு ஆபத்து என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது
ஈரான் 1980களில் அதிரடி காட்டிய நாடு, அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிடித்ததாகட்டு, அமெரிக்க ஹெலிகாப்டர்களை சிறைபிடித்ததாகட்டும்
ஏன் லெபனானிய ஷியா தீவிரவாதிகளை கையில் எடுத்து அமெரிக்க விமானங்களை கடத்தி ரீகனை அலறவிட்டதாகட்டும்
அவர்களின் வரலாறு ஒரு மாதிரியானது
பழைய தரவுகளின் படியும், கிடைக்கும் உளவுதகவலின் படியும் ஈரான் பெரும் நடவடிக்கைக்கும் பதிலடிக்கும் தயாராகின்றது என்பதை உணர்ந்த பிரிட்டன் பம்முகின்றது
எங்களை வாழவிடவில்லை என்றால் யாரையும் வாழவிடமாட்டோம் என ஈரான் உலகை மிரட்ட தொடங்கியிருக்கின்றது
அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன