சமூக நீதி கோஷ்டிகள் கனத்த அமைதி

இஸ்ரோ விஞ்ஞானிகளை கவனித்தால் ஒன்று புரிகின்றது

அந்த விக்ரம் சாராபாய், சத்தீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற வரிசையாகட்டும்

இந்த ரவிஅருணன், மயில்சாமி அண்ணாதுரை , சிவன் போன்றோரின் வரிசையாகட்டும

டெசி தாமஸ், வனிதா முத்தையா, ரிது காரிடலாகட்டும்

யாரும் பிராமணர் அல்ல, மிக முற்படுத்தபட்ட சாதியும் அல்ல. இட இதுக்கீடு ஒன்றால் உயர வந்தவர்களும் அல்ல‌

அவர்களின் கல்வியும் விடா முயற்சியும் கடின உழைப்பும் அதற்கு மேல் அவர்களின் விதிப்பலனும் அவர்களை கொண்டு சேர்த்திருக்கின்றது

விதிபலன் என்பது வேறொன்றுமல்ல, ஒரு தடையுமின்றி அவர்கள் இந்நிலை எட்ட உதவியிருக்கும் வாழ்க்கை அமைப்பு

ஆக பிராமணனே இந்தியாவினை ஆள்கின்றான், சுரண்டுகின்றான், அடுத்த சாதியினை வளரவிடமாட்டான் போன்றவை எல்லாம் அபத்தமான வாதங்களும் குறுகியவட்டத்து அசிங்கமான அரசியல் பொய் என்பதும் பட்டவர்த்தனமாக புரிகின்றன‌.

எல்லா உயர்பதவியும் பிராமணன் எடுத்துகொள்வான் என்பதெல்லாம் பெரும் பொய்..

தகுதியும் திறமையும் கொண்ட யாரும் இங்கு உயரலாம், கலாம் போல டெசி தாமஸ் போல சாதிக்கலாம்

மதம், இனம் , சாதி எல்லாம் இந்நாட்டில் யாருக்கும் தடை அல்ல.

அப்படி ஒரு தடை இருப்பதாக 
சிலர் சர்ச்சைகளை கிளப்புவது அரசியலுக்காக சிலர் கிளப்பிவிடும் அபத்தமான வாதம்

இந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் ஒரு பிராமணனும் இல்லை என்பதும் விஞ்ஞான மேதைகள் தங்கள் தகுதி ஒன்றால் மட்டுமே உயர்ந்தவர்கள் என்பதாலும் பல அழிச்சாட்டிய சமூக நீதி கோஷ்டிகள் கனத்த அமைதி