அந்த கோஷ்டி சொன்னால் சத்தம் உரக்க கேட்கும்

வைகை ஆற்றில் அந்த கோஷ்டி ஏதோ செய்ய போகின்றதாம், உடனே இந்த கோஷ்டியும் ஏய் வைகையினை காக்க போகின்றோம் என கிளம்பிவிட்டது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வைகை நதியினையே காணவில்லை, மணல் கூட இல்லை

இது வைகை நதி என அறிவிப்பு பலகை மட்டும் இல்லை என்றால் அப்படி ஒரு நதி இருப்பதே இப்போதைக்கு தெரியாது

வறண்ட ஆற்றில் என்ன செய்ய போகின்றார்கள்? கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆடிவிட்டு வரலாம் அவ்வளவுதான்.

வைகை ஒன்றும் வடக்கத்தியாருடன் தொடர்பில்லா நதி அல்ல‌

ஆனானபட்ட சிவபெருமானே இமயமலையில் இருந்து இங்கு வந்தாராம், அந்த நதியே அவர்தான் உருவாக்கினாராம்

அக்காலத்தில் இருந்தே இங்கிருந்து காசிக்கு செல்வது போல, வடக்கத்திய மக்கள் மதுரைக்கும் ராமேஸ்வரத்துக்கும் வருவது வழமை

அப்படித்தான் வருகின்றார்கள்

யாரும் வரட்டும் ஆனால் வரும் முன்பு வைகையின் ஆதாரமான முல்லை பெரியாறு தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சொத்து அதில் வாலாட்டும் கேரள அரசை கண்டிக்கின்றோம் என சொல்லிவிட்டு வரட்டும்

அந்த கோஷ்டி சொன்னால் சத்தம் உரக்க கேட்கும், இது அவர்களின் காலம்

அதனால் வைகையினை காக்கும் எல்லா விஷயங்களையும் உறுதிபடுத்திவிட்டு வைகைக்கு வரட்டும், குளிக்கட்டும் பூஜிக்கட்டும்