பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா
இப்படி இரு கதை சுற்றிகொண்டிருக்கின்றது, ஈழ சிக்கலை அறிந்தவருக்கு தெரியும் இதெல்லாம் மாபெரும் பொய்
இலங்கையில் ஆயுதபோராட்டம் 1975க்கு பின்புதான் வந்தது, அதுவும் குட்டிமணி எல்லாம் போராட வந்தது 1977களில்
அப்பொழுது அவர்கள் அவ்வளவு பிரபலமில்லை, 1982ல் பிடிபட்ட குட்டிமணி கோஷ்டி வெலிக்கடை சிறையிலே கொல்லபட்டது
கலைஞர் அரசு 1975லே டிஸ்மிஸ் செய்யபட்டது, அதன் பின் அவர் முதல்வரானது 1987ல் அப்பொழுது அமைதிபடை காலம் வந்தது, அவர்தான் அதை திரும்பபெற்றார் விபிசிங் மூலமாக
ஆக 1975ல் பதவியினை இழந்த கலைஞர் 1980களில் குட்டிமணியினை எப்படி கைது செய்தார்?
அதற்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?
ஈழசிக்கல் இங்கு வெடிக்கும் பொழுது ராமசந்திரனே ஆண்டார், எல்லா துறைகளும் அவர் வசமே இருந்தன உளவுதுறை உட்பட
இதில் கலைஞர் எங்கிருந்து காட்சிக்குள் வந்தார்?
இதெல்லாம் அபத்தமான பொய்களும் வீண் கற்பனை அவதூறுகளுமாகும்..
முக ஸ்டாலின் சொல்லும் பழமொழிதான்
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா”
