கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

அந்த கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

நெல்லையில் அன்று நடந்த போலீஸ் தடியடிக்கும் 17 பேர் சாவுக்கும் கலைஞரே காரணம் என கிளம்பிவிட்டார்கள்.

அதில் நடந்தது என்ன?

1995களில் கலைஞரை எதிர்த்து ஏகபட்ட சாதி சங்கங்கள் உருவாயின அல்லது உருவாக்கபட்டன‌

அப்படி உருவாக்கபட்டவர்தான் கிருஷ்ணசாமி, ஆரம்பத்தில் சில தேர்தல் முடிவுகளை கூட அவர் நிர்மானிக்கும் சக்தியாய் இருந்தார், மறுக்க முடியாது.

அப்படிபட்ட கிருஷ்ணசாமி என்பவர் திடீரென தான் தலித் மக்களை காக்க வந்தவன் என்றார், மாஞ்சோலை மக்களுக்கு நானே விடிவெள்ளி என்றார்

அந்த மக்களுக்கு கூலியினை உயர்த்தி கொடுக்க போராட்டம் என அறிவித்தார், அந்த தொழிலாளர்களை நெல்லைக்கு அழைத்து வந்தது அவர்தான்

அந்த போராட்டத்துக்கு கலைஞர் அரசு அனுமதியும் வழங்கிற்று

சிக்கல் எங்கு வந்தது என்றால் போராட்ட கோஷ்டி ஒரு கட்டத்தில் எல்லை மீறி காவல்துறையினை மீறி செல்லும் அளவு இருந்தது

சில பெண்காவலர்கள் மேல் விரும்பபதாத சம்பவங்கள் நடக்க தொடங்கின‌

அங்குதான் காவல்துறை விழித்து கொண்டது, அது அவர்கள் கடமையும் கூட‌

காவல்துறை தாக்க தொடங்க கூட்டம் சிதறி ஓடியது, துரதிருஷ்டம் அங்கு ஆறு ஓடிகொண்டிருந்தது

அதுதான் சிக்கலுக்கு காரணம், ஆற்றை கடந்து ஓட துணிந்தவர்கள் சுழலிலும் நீரிலும் சிக்கி இறந்தனர்

இதுதான் நடந்தது

மற்றபடி காவல்துறை வேண்டுமென்று கொல்லவில்லை அவர்களுக்கு அது அவசியமில்லை.

ஆக தற்செயலாக நடந்த விஷயம் என்றாலும் அந்த சம்பவத்துக்கு முழு காரணம் கிருஷ்ண்சாமி

மாறாக கலைஞர் அன்று முதல்வராக இருந்தார் என்பதற்காக அவர்தான் கொலைகாரன் என்பதெல்லாம் அபத்தம்

அந்த கலைஞர்தான் எவ்வளவு பாவம்?

இலங்கையில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு, தாமிரபரணியில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு

தாமிரபரணியில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு

இவ்வளவுக்கும் அவர் ஒரு இடத்தில் கூட என்கவுண்டர் உத்தரவு கொடுக்கவே இல்லை

ஆனால் மெரினாவில் மண்டைகாட்டில் இன்னும் பல இடங்களில் சுட உத்தரவு கொடுத்த ராமசந்திரன் வள்ளல்

ஏகபட்ட என்கவுண்டர்களை செய்ய சொன்ன ஜெயலலிதா குறித்து சத்தமே இருக்காது

ஏன் தூத்துகுடி விவகாரம் கூட அமுக்கபட்டுவிட்டது

ஆனால் கிருஷ்ணசாமியால் நடந்த அந்த சாவுகளுக்கு காரணம் கலைஞர்

இதெல்லாம் தமிழக நியாங்களாம்

நமக்கு திமுகவின் பல கொள்கைகள் மேல் உடன்பாடு இல்லை என்றாலும் பொதுவான நியாயங்களை சொல்லாமல் இருக்க முடியாது

தாமிரபரணி சாவுகளில் கலைஞரை இழுப்பது வடிகட்டிய அயோக்கியதனமன்றி வேறல்ல..

அந்த போராட்டத்தை தொடக்கி வைத்து சாகவும் கொடுத்து இன்றளவும் அவர்களுக்கு நியாயமோ ஊதிய உயர்வோ பெற்றுகொடுக்காத கிருஷ்ணசாமி பற்றி யாருமே வாய்திறக்கமாட்டார்கள் என்பது இன்னொரு பக்கத்து உண்மை